Friday, August 30, 2019

மாகிமை

மாகி(மை)
maggiyananda Mayi.என் கடைக்குட்டியின் செல்லப் பேர் ஒரு காலத்தில். A for apple சொல்லும்போது கூட M for maggiனு சொல்வோம் நாங்க.மாகி ban ஆனப்போ ஆடிப்போன குடும்பத்தில் நாங்களும் ஒண்ணு.
மாகி படைத்து விட்டால்
மாமலையும் ஓர் கடுகாய்
மளமளனு வேலை நடக்கும்.
காலம் மாறித்தானே போகும்.

ஏன்னா...இப்போ கொஞ்சம் வளர்ந்துட்டோமே.. weight conscious..diet plan..etc..etc..மாகிக்கு வந்தது முதல் வேட்டு.பாக்கெட் பாக்கெட்டா ரொம்பி வழிஞ்சது போய்..
போதும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரு மாசத்துக்குனு மனதை அடக்க ஆரம்பிப்பு.
இரண்டு நாள் முன்னாடி ..இருந்த பொட்டலமெல்லாம் காலியாக எங்களுக்குள் நடந்த conversation.
அவள்: அம்மா..மாகி காலி.வாங்கிண்டு வா. ஒரே ஒரு பாக்கெட் போதும்.என்னை tempt பண்ற மாதிரி offer ல கிடச்சுதுனு அள்ளிண்டு வராதே.ஆமாம் சொல்லிட்டேன்.
நான்: அட என செல்லமே மாகியானந்தமயி..உன் சித்தம் என் பாக்கியம்.
பையை தூக்கிண்டு கடைக்கும் போயாச்சு.எல்லா சாமானும் வாங்கினப்பறம் என்னவோ மிஸ் ஆறதேனு மண்டை குடைய..(மைண்ட் வாய்ஸ் இதுக்குத்தான் வயசான காலத்தில லிஸ்ட் எழுதிண்டு வரணுங்கறதுனு என்னை உசுப்பித்து.)
பில் போடும் வேளையில் ..கண்டேன் சீதையை..மாகி ..மாகி..வரிசையா அடுக்கி வைத்தபடி ,என்ன தேடறீங்க அக்கா..என்னைக் கேட்டாள் கடையில் வேலை செய்யும் பெண்.இதே தான் ம்மா..
ஒரு பாக்கெட் கொடு என்றேன். பழக்கப்பட்ட அவள் சொன்னாள்..அக்கா இப்போ ஒரு பாக்கெட் வாங்கினா ஒரு சூப்பர் மாகி bowl free க்கா..இந்த offer
இப்பவே முடிஞ்சிடும் . ஒரு இரண்டாவது எடுத்துப் போங்க என்றாள்..ஓசிக்கு ஆசை யாரை விட்டது. very colorful and catchy bowl. வாங்கியாச்சு.
வீட்டுக்கு வந்ததும் மகளைக் கூப்பிட்டு மாகி இந்தாம்மா என்றேன்.
யக்..இது யார் கேட்டா..எனக்கு இந்த flavour பிடிக்காதே..அதைக் கூட பாக்க மாட்டியா.. ஏம்மா free கிடைச்சதால்் என் favourite மறந்து போச்சா ..சரி சரி..போ..adjust பண்ணிக்கறேன் இந்த டைம் என்றாள்.
டீவில  ஓடிக் கொண்டிருந்த ரஜினி பாட்டு..என்
காதில் இப்படி விழுந்தது..

cupக்கும் , glassக்கும், spoonக்கும் ஆசைப்பட்டு..
வாழ்கின்ற வாழ்வுக்கு
என்றைக்கும் அர்த்தமில்ல..
இதைப் புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா..?
 culprit நான் தானே?

Shopping

புடவை ஷாப்பிங்.

காலேஜ் ethnic day..
கனவுடன் பட்டாம்பூச்சிகள்..

கறுப்பு கலர்..
கண்டிப்பா கலந்து இருக்கணும்..

கட்டிண்டால்..
கரீனா கபூர் மாதிரி தெரியணும்.

கண்ணை பறிக்கும் ஜரிகை கூடாது
கண்ணு போடறாப்போல இருக்கோணும் என் செலக்‌ஷன்..

கண்டிஷன் ...கடகடவென்று
கடைக்குட்டியும் போட்டாளே..

கூல் டிரிங்க்கும் கையுமா
கடை கடையா ஏறி இறங்கல்..

கலர் பிடிச்சா .பார்டர் படு 'போ'ர்
பார்டர்  பிடித்தாலோ..
ப்ளவுஸும் ஃப்ளாப்பாச்சு..

மால்கள் சுத்தி வந்தும்
மனசுக் கொண்ணும் பிடிக்கலை.

பெரிய கடைகளில் எல்லாம்
பெரிசா ஒண்ணும் புதுசா இல்லை..

பக்கத்து பொட்டிக்(boutique) கடையில்
புதுப்புது டிசைனில்
பளிச்சுனு புடவை கிடைக்க..
பிரித்து கட்டி அழகு பார்க்க
பிரமித்து நின்றேன்..
பாரம்பரிய உடை அழகே தனிதான்.

ethnic day க்கள்..
அடிக்கடி வரட்டும்..
எங்கோ மூலையில்..ஈனஸ்வரத்தில்
என் மைண்ட் வாய்ஸ்

Wednesday, August 21, 2019

தேடல்

தேடல்
எல்லாம் வாங்கியாச்சா..
எத்தனை பேர் சாப்பாடு..
காலைல எழுந்ததும்..
காத்துல பறந்துடும் நேரம்..
காய் கறி நறுக்கி..
கோலத்துக்கு அரைச்சு..
சாமி உள் சுத்தம் பண்ணு
வெல்லம் பொடிச்சுடு..
விடு விடுனு வேலை ஆகும்..
கரெண்ட் போறதுக்குள்ள..
grinder ,mixie வேலையாகட்டும்.
சமையல் மேடை ..
சகதியா இருக்கப்படாது..
பளிச்சுனு இருக்கணும்...
கீழ மேல சிந்தாமல்..
பாந்தமாய் வேலை செய்யனும்..

மாமி வந்தாச்சு பாரு..
நலங்கிட்டு..நமஸ்காரம் பண்ணு..
நன்னா..சாப்பிடுங்கோனு..
நாலும் கேட்டு பறிமாறு..
இந்த புடவை எடுப்பா அமைஞ்சிருக்கு..
நன்னா..select பண்ணியிருக்கே..

சாயந்திரம் சஹஸ்ரநாமம் பாராயணத்துக்கு..
சுண்டலும்..கேசரியும் பண்ணு..
பையில வெத்தல பாக்கோட
பழமும் தேங்காயும்...
pack பண்ணி வெச்சுடு...
பாராயணம் முடிஞ்சு..
எல்லாரும் போயாச்சு..
காலம்பறலேர்ந்து..பம்பரமா சுத்திட்டே..
நாளைக்கு லீவு நாள் தானே..
நிம்மதியா கொஞ்சம் தூங்கு..
நல்லபடியா எல்லாம் ஆச்சு..

எப்போதும் போல் என் அம்மா..
என்னை....ஆட்டுவிக்க..
எனக்குள்ளே ஒரு கேள்வி..!!!

இத்தனை பேரில்..
யாராய் நீ வந்தேம்மா.
எப்போ வந்தே..
எனக்கு அடையாளம் தெரியலயே..
நான் கவலையாய் கேட்க..
புன்னகை ஒன்றே பதிலாய்..
photo வில் நீ..