Wednesday, July 27, 2022

Happy birthday sankaran mama

 Happy birthday Gopalan Sankaran  mama..


சங்கரன் மாமா..

வார்த்தைக்கு வார்த்தை தெறிக்கும் காமெடி..

ஜானகி மாமியின் சூப்பர் ஜோடி..

சரியான ஜாடிக்கேத்த மூடி..


இவர் இருக்குமிடம் அதிரும் சிரிப்பு சரவெடி.

நடிப்பிலே ..நாட்டுவார் கொடி..

உதவுவார் எல்லாருக்கும் ஓடி ஓடி..


பெண்களுக்கு இவர் சூப்பர் டாடி..

இருக்க மாட்டார் ..moody..


அப்பப்போ பிடிப்பார் கரண்டி..

அவர் சமையலுக்கு மாமி கியாரண்டி .


இவரைச் சுத்தி எப்பவும் நண்பர்கள் கோஷ்டி..

கடி ஜோக் சொல்லி அடிப்பாரே லூட்டி..


இவருக்கில்லை போட்டி..

இவர் ஒரு சகலகலா கில்லாடி..


இவர் இருப்பது பெங்களூரு சிட்டி..

இருந்தும் செல்ல முடியவில்லை பறந்தோடி..


வாழ்த்துக்கள் இன்று குவிந்திருக்கும் கோடி..

என் வாழ்த்தும் சேரட்டும் இவரை நாடி..


Happy birthday mama


Happy birthday gopalan sankaran mama.


சங்கரன் மாமானு சொன்னதுமே..

சரளமாய் அன்புடன் பழகும் முகம் கண்முன் வரும்..


சரவெடியாய் 

சிரிப்பு வெடி வெடிக்கும் ..அவர் இருக்கும் இடம்


Sankaran..

என் நட்பு வட்டத்தில்..

பளிச்சிடும் 'kiran"..


இவர் பேச்சிலே தெறிக்கும் fun

இவருக்கோ இருக்கு ... பல. .."fan"..


வாங்கோ மாமா..போடலாம் ஒரு மீட்னு சொன்னால் போதும்..

கிலோ மீட்டர் பல கடந்து ( பெங்களூரு traffic அப்படி)..

கிலோ கிலோவாக அன்பு சுமந்து ..மாமியுடன் வந்து ..மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்.


உங்க special day இன்று.

என் அன்பான நமஸ்காரங்கள் மாமா.


உட்கார்ந்திருப்பது எங்க வீட்டு சோஃபா..


ஆனால்..எப்போதுமே எங்க எல்லாரின் மனசிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும்..

Sankaran mama..very sweet and simple mama








Friday, July 22, 2022

திங்களும் வந்தது..

 திங்களும் வந்தது..


Tiffin box எடுத்து வெச்சுட்டு 

"#share பண்ணிக்கோடா உன் ஃப்ரண்ட்ஸோட..".. என்று பெண்ணிடம் நான் சொல்ல..


யார் பொண்ணு அவ?


போட்டாளே ஒரு போடு..


"Fb லயா..Instagram ஆ.. இல்ல watsapp லயா?


Share என்று சொன்னதும்..

செயலிகள் தான் ஞாபகம் வருதோ?


ஆத்ம நண்பர்கள்

"App" வழி வந்தவர்கள்

Appreaciate பண்ணுவாங்க..

Applause 👋 தருவாங்க.


Correct தானே?😀


திங்கள் கிழமை

Thought ம் வந்தது..

தோழமைகள் இங்கிருக்க

தொய்வு என்பதேது வாழ்க்கையில்..?


Start muzic நட்பூஸ்..


அன்புடன்..

Wednesday, July 20, 2022

எதிரி

 #எதிரி..


என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி?


இந்த வேலை ரொம்ப கஷ்டம்..

நடக்கவே நடக்காது..


எதுவுமே சரியாகவே நினைச்ச மாதிரி நடக்க மாட்டேங்கிறதே..இப்படி புகார் பெட்டகம் மனசில் ஓடிக் கொண்டே இருக்கா..


புலம்பல் இல்லாத வாழ்க்கைனு ஒண்ணு உண்டா என்ன?


யோசித்துப் பார்த்தால்..நம்மை சந்தோஷமா இருக்க விடாமல் சதித் திட்டம் போடறது யாரு?


யார் அந்த எதிரி


யாரு?..யாரு?


எங்கே ஒளிந்து கொண்டு இருக்காங்க?


பல கேள்விகள் மனசில ஓடுகிறதா?


எங்கே  தேட ஓடறீங்க..

Wait..wait.


Very simple...


#எதிரி.. வேற யாரு?..எங்கியும் இல்லை..


பின்ன?


நம்மிடமும் நம்மை சூழ்ந்து இருக்கும்..


 #எதிர்மறை_எண்ணங்கள் தான்.. நமக்கு பெரிய எதிரி..


சாய்வு நாற்காலியில் உடகார்ந்து சதித் திட்டம் போடற ஆளை..

சிம்மாசனத்தில் தூக்கி வைக்காமல்..

சீந்தாமல் இருந்து பாருங்க..

 சீச்சீ..இந்த ஆளு கிட்ட நம்ம வேலை நடக்காது என்று..

சீறி பாய்ந்து ஓடி விடுவார்..


எதிர் மறை எண்ணங்களை அடையாளம் காண்போம்..

என்னிடம் உனக்கு இடமில்லை என்று..

எதிரியை..

எள்ளி நகையாடி..

வாழ்க்கையை வாழ்வோம்..வெற்றி கொள்வோம்.


இந்த நாள் இனிய நாள்..

அன்புடன்..

.....

Lemon grass tea

 #Lemon_grass_ginger_Honey_tea.


#Thappad..movie


தையா தக்கானு எல்லாரும் கொதிச்சு கொந்தளித்த நேரம்..

என்னை ரொம்ப கவர்ந்த விஷயம்..

Tapasee போடும் #garma_garam_chai  தான்..🍵

( நமக்கு ..நம்ம கவலை😂


அப்படியே கிச்சன் ஜன்னலைத் திறந்து..

அந்த lemon grass ஐ வெட்டி , கலை நயமா ஒரு டீ போடுவாங்க பாருங்க..


ஆஹா..ஓஹோ..


சரி..நாம் தான் இப்படினு பார்த்தால்..

ஒரு சங்கமே பின்னாடி இருக்காங்கனு

You tube பார்த்ததும் புரிஞ்சது..


Very refreshing chai with ginger and lemon 


சரி . சரி..


Weight ஏறிய பின்னே..

Walk போகலாமா..?

Gigantic ஆன பின்னே

Gym போகலாமா..?

Belly fat கூடின பின்னே..

Belly dance போகலாமா..?


TMS ..மைண்ட் வாய்ஸில் பாடறார்..


எதுக்கும் வழியில்லை..அதனால் என்ன?


இன்னிக்கு நமக்கு ஒரு காஃபி ,டீ குடிக்க அருள் இருக்கே..

அது போதும்தானே..


Mundane Monday வந்தாலும்..

Amazing Monday ஆக்குவோம்..


#எஞ்சாய்_சாய்_சாய்😀😀


Monday, July 18, 2022

வடை

 முற்பகல் மசால் வடை  செய்யின் ..

பிற்பகல் உசிலியாய்

 தானே வரும் '..


வெயிட் போடும் வேண்டாம்னா..

விடுவேனா..💪💪💪💪


"பேடா வடை"..

"பேக்கு "உசிலியாய் ..

மாறிப் போச்சு..


போட்டு வைத்த உசிலித் திட்டம் ஓகே கண்மணி  😄😄😄😄😄


 உருவங்கள் மாறலாம்..


Sunday, July 17, 2022

கேள்விக்கென்ன பதில்

 "ஒரே முகத்தைப் பார்த்து பார்த்து..

 bore அடிக்கிறது ..

நீ மட்டும் எப்படி இப்படி சந்தோஷமா இருக்கே'..கேட்பாள் பெண்..


"ஆமாம்..எனக்கேன் அலுக்கவில்லை..'!


"பின்ன..நமக்கு எத்தனை பேரை பார்த்து பேச வேண்டி இருக்கு..நீங்க மட்டும் தான் con call ல இருப்பீங்களா?'


என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்..

என் பூஜையறையில் இருக்கும் தெய்வங்கள்..


விட்டால் தானே இவள் என்னை என்று🙏

ஆடி மாசம் ..

 ஆடி மாசம் ..

ஆலயங்களில் இந்தப் பாட்டு கட்டாயம் ஒலிக்கும்..


" செல்லாத்தா ...

செல்ல மாரியாத்தா..'..


நேரே அவள் பக்கத்தில் நம்மை கை பிடித்து  கூட்டிக் கொண்டு போகும் வரிகள்..


அடுத்த வரிகள் தான் magic..


" என் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா'..


எத்தனை அற்புதமான வரிகள்.


அம்மா..உன்னை கோடானு கோடி பக்தர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


என்னோட சிந்தையிலும் ஒரு அரையே அரை வினாடி வந்துட்டுப் போம்மா..


அந்த அரை வினாடி போதும்.

அவள் எண்ணம் தரும் நிம்மதி..


போக முடியவில்லை இப்போ..

அவள் சன்னதி..

என்ன ஆனாலும் ..

நீயே கதி..

Sunday, July 3, 2022

வல்லமை தாராயோ..

 வல்லமை தாராயோ..


மோட்டுவளையும் மாட்ச்சும் மாத்தி மாத்தி பார்க்கும் அப்பா..திடீரென்று நேத்திக்கு ' பக்கத்து கடைக்கு போய்ட்டு வரேன் ..லிஸ்ட் கொடு என்றார். விடுவேனா..ஒரு ஆள் வேலை செய்ய கிடைச்சால். ..


அவரெல்லாம் ரொம்ப systematic. ஒரு பேப்பர் எடுத்து பிள்ளையார் சுழி போட்டு தேதி போட்டு..உஸ் அப்பா..நான் அப்பறம் மறந்துடுவேன் என்று சொன்னதை கண்டுக்கவே இல்லை. எட்டு ஐட்டம் இருக்குப்பா..home delivery பண்ண சொல்லுங்கோ..நீங்க தூக்க வேண்டாம் என்றேன். 


கடைக்கு போய்ட்டு சைட்ல பேத்திக்கு கடலை மிட்டாயும் வாங்கி வீட்டுக்கு வந்தார்.


அவர் பொறுமையை சோதிச்சது..சாமான் வராமல்..நான் சரியாதானே சொன்னேன் அட்ரஸ் ..இன்னும் வரலையே..ஃபோன் வேணா பண்ணேன். ஒரே restless.

இந்த அபார்ட்மென்ட் வரும்போது கொண்டு வருவாம்ப்பானு நானும் சமாதானம் சொன்னபடி இருந்தேன்.


வந்தார் வந்தார் ..டெலிவரி பாய். தந்தார் தந்தார் சாமான் எல்லாம்.

உள்ளே எடுத்து வைக்கப் போனேன். ' இரு இரு ..எல்லாம் சரியா இருக்கானு செக் பண்றேன் அப்படின்னார். எப்பவும் தருபவர் தானேப் பா..why tension என்றேன்.


என் நேரம்..லிஸ்டில் 9 ஐட்டம்..என் கிட்ட 8 ஐட்டம். தோண்டி பார்த்ததில் ஒரு சந்திரிகா சோப் எக்ஸ்ட்ரா 25 ரூபாய்க்கு. கடையில் பில் பார்க்கலை. 


நீ என்ன பண்ற காலம்பற கடை திறந்ததும் போய் அவன்கிட்ட சொல்லி 25 ரூபாய் வாங்கிண்டு வந்துடு. இனிமே நீயும் ஜாக்கிரதையா செக் பண்ணு. இன்னும் எவ்வளவு போச்சோ இப்படினு ஒரே புலம்பல்.


காலையில் எழுந்ததும் first reminder அதுதான். 

போனேன் கடைக்கு.நீங்க வாங்கினது தான்னு பில் போட்டவர் argue செய்ய..அப்பா எடுத்துண்டு போன லிஸ்ட்டை காண்பிச்சேன். இதுல இல்லையே..இப்பவாவது ஒத்துக்கறயா என்றேன். ' என்ன madam..இத்தனை வருஷமா வாங்கறீங்க ..ஒரு 25 ரூபாய்க்கு இப்படி பண்றீங்களே என்றார்.


ஒரு சின்ன க்ளாஸ் எடுக்க வேண்டியதாப் போச்சு அவருக்கு. 

' என் அப்பா 82 வயசில தானே வந்து வாங்கணும்னு வந்தார். இப்போ இப்படி தப்பா போனால் தான் இதுக்கு கூட லாயக்கில்லையோனு சோர்ந்துடுவார்ப்பா..

அவரோட self confidence ம் போயிடும்..உன் மேல இருக்கும் confidence ம் போய்டும்.

பரவாயில்லையா..' என்று கேட்டேன்.


25 ரூபாயை திருப்பி கொடுத்து அந்த பில்லையும் சரி செய்து வாங்கி வந்து அப்பாகிட்ட காண்பித்தேன்.

ஒரு sigh of relief அவரிடம்.


அவர்கள் மன நிலையில் இருந்து யோசித்தேன்..இப்படித்தான் அவர்கள் மன ஒட்டம் இருக்குமோ..


தூக்க மருந்து  தாலாட்டுமுன்

தூக்கிப் போடுமே இருமல்

என் லொக் லொக்  சத்தம்

கொர் கொர் குறட்டைக்காரரையும்

கூப்பிட்டு எழுப்புமே..

தலைகாணி உயரமாகும்..

தலை விதி நொந்து..

தாரையாய் கண்ணீர்..

.

கோழிக் கூவும் நேரம்..

கண்ணும் சொக்கும் தூக்கம்..


எட்டு மணி ட்ரெயின் பிடித்து

எட்டிப் பாய்ந்து பஸ் பிடித்து

ஓட்டமும் நடையுமாக..

ஓவர் டைமும் பார்த்த நாட்கள்..


ஓரமாய்..சின்ன நினைவாய்..

 விழிப்பும் ஒரு வழியாய் வர..

வேகத்தில் இயங்கும் வீடு..


பெண்ணும் பேத்தியும்..

பேச்சா..சண்டையா..??

புரியாத புதிராய் நான் முழிக்க..


சூடாக் குடித்த காபி..

சுட சுட செய்தியுடன் பேப்பர்

வெது வெது நீரில் குளியல்..

வேண்டுதல் நாளின் இனிமைக்கு..


பசித்து புசித்த காலம்..

பழங்கதையான ஏக்கம்..

மாத்திரைகள் பாதி உணவாக..

மருந்தாய் தோன்றும் சாப்பாடும்..


ஒற்றை வரியில் பேசிய நானோ

ஒன்றையே இரண்டு மூன்று முறை...!!


வலிகள் தரும் வேதனை..

விடுதலை வேண்டி ப்ராத்தனை.


கடந்தது எல்லாம் கனவாய்க் கலைய

நிகழும் காலம் நீளமாய்த் தெரிய

வரப்போகும் விடியல்..

விரட்டுமென் சோதனையென

விழித்தபடி படுத்திருக்கேன்..

விடிய இன்னும் நேரம் இருக்கே..

புரண்டு படுக்கையிலே..

புலப்பட்டத்து ஓர் ஒளி..

' நீ அவனில்லை..

நினைத்தை முடித்த..

நீ..அவனில்லை..'

நொடியில் மறைந்தது..

நிமிண்டிய அவ்வொளி..!!


சூரிய கிரணமும்..எனைச்

சுறுசுறுப்பாக்க..

"பழக்கம் எனக்குமுண்டு..

பழம் காய் வாங்க..

பக்கத்து கடைதானே..

பத்திரமாய் போய்வருவேன்"..

விக்கித்து நின்றாள் பெண்..

மோட்டுவளை பார்த்தவன்..

மீண்டெழுந்தேன்...

மீதமுள்ள நாட்களை..

மகிழ்ச்சியாய் கழிக்கும்..

மனத் திடத்துடனே..


வயோதிகம்..ஒரு வியாதியல்ல..மருந்து மாத்திரையுடன் தெம்பும் தன்னம்பிக்கை யும் தருவோம்.

கனவு மெய்ப்படும்

 #நிலாமுற்றம்_கதைக்களம்

#சித்திரக்கதை


#கனவு மெய்ப்படும்


14-03-21


எண்: 1892


" அம்மா..இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்மா..நான் இன்னும் கொஞ்சம் படிக்கணும்னு ஆசைப்படறேன்"..

வசந்தாவின் பேச்சைக் கேட்க  அம்மா அங்கே நிற்கவில்லை..


" ஃபர்ஸ்ட் க்ளாஸ் பையன்.குடும்பம் ரொம்ப நல்ல மாதிரியா இருக்கா..நம்ம பொண்ணு அங்கே போய் ஜாம் ஜாம்னு இருப்பாள்'..அப்பா சந்தோஷத்தின் உச்சத்தில் பேசிக் கொண்டிருந்தார்.


" இப்ப என்ன..உனக்கு டீச்சர் ட்ரெயினிங் படிக்கணும் ..அவ்வளவுதானே..தஞ்சாவூரை விட..இன்னும் நிறைய உனக்கு படிக்க சான்ஸ் கிடைக்கும்' ..தங்கை  ஜானு அட்வைஸ் மழை பொழிந்தாள். அவள் கவலை அவளுக்கு..இவள் கல்யாணமாகி சென்றால்தானே ஜானுவின் லைன் க்ளியராகும்.


"உனக்கு பின்னால இன்னும் ரெண்டு பேரை கரையேத்தனும்மா.." எழுபதுகளில் இருந்த அப்பாக்களின் அதே வசனம் ..வசந்தாவின் அப்பாவும் பேச ..

தலை ஆட்டி விட்டாள்.


கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடக்க..வெங்கடேஷை கைப் பிடித்தாள் வசந்தா..


நாக்பூர் அருகே ஆர்டினன்ஸ் ஃபாக்டரி குடியிருப்பில் குடித்தனம் ஆரம்பம்.


ஒரு ரூமும் ஒரு சின்ன கிச்சனும் தான் .

பெரிசாக சாமான் ஒன்றுமில்லை..


இதுவரை பேச்சிலர் வாழ்க்கையில் இருந்ததால் ஒரே ஒரு பம்ப் ஸ்டவ் மட்டும் அந்த குட்டியூண்டு மேடையில் இருந்தது.


தஞ்சாவூர் வீட்டின் அடுக்களை அவளுக்கு நினைவுக்கு வந்தது..


நாள் முழுவதும் அம்மாவின் கைப்பக்குவம் மணக்கும்.


இங்கே..தான் ஒருத்திக்காக என்ன சமைப்பது?

வெங்கடேஷ்  காலையில் சென்றால் ..இரவு பத்து மணி ஆகிவிடும் அவன் வீட்டுக்கு வருவதற்கு..


அவனுக்கு மதிய உணவு அங்கேயே காண்டீனில் கிடைத்துவிடும்.

காலையில் கஞ்சி போட்டு குடித்துவிட்டு..

மத்யானம் நிதானமாக சமையல் ஆரம்பித்தால்..பம்ப் ஸ்டவ்வுடன் அவள் பொழுது போய்விடும்.


இதற்கிடையில்..


"மேடம்..மேடம்.." யாராவது கூப்பிடும் குரல் கேட்டாலே பயம். 

தெய்வமே..இவங்க என்ன கேள்வி கேப்பாங்களோ..நான் என்ன பதில் சொல்லுவேனோ தெரியலையே..முருகா..காப்பாத்து '..

ஒவ்வொரு முறையும் வாசல் கதவு தட்டும்

போதும்  தவறாமல் வேண்டிக் கொள்வாள்.


ஹிந்தி,மராட்டி என்று கலந்து கட்டி பேசுபவர்கள் ..

இவள் புதுசாய் வந்ததால் ..அவளோடு பேச நினைக்கும் பக்கத்தில் இருக்கும் குவார்ட்டர்ஸ் குடும்பத் தலைவிகள்.


" ஏங்க எனக்கு ஹிந்தியில நாலு வார்த்தை கத்துக் கொடுங்கனு'.. எழுதி வைத்து மனப்பாடம் செய்தால்..

சோதனையாய் ..பக்கத்து வீட்டுக்காரி வந்து மராட்டியில் மழையாய் பொழிந்து விட்டு ..கடைசியில் சைகை பாஷை துணை கொடுக்க..அவர்கள் சம்பாஷனை நடக்கும்.


வலதுகரம் வந்ததுமே..அங்கே நர்த்தனம் ஆரம்பிக்கும்..இவள் சொல்றது அவளுக்கு புரியாது..ஒரே குண்டக்க மண்டக்க தான்..


இவள் ஒவ்வொரு நாள் அனுபவமும் கேட்டு கண்ணில் தண்ணீர் வர சிரிப்பான் வெங்கடேஷ்.


பாரத விலாஸ் போல அந்தக் குடியிருப்பில் எல்லா மொழியினரும் இருக்க...வசந்தா மிரண்டு போனாள்.


ஆச்சு..வந்தது தலை தீபாவளி.

 தஞ்சாவூருக்கு  அம்மா வீட்டுக்குக் கிளம்பியாச்சு.

 

எதற்கெடுத்தாலும் "அச்சா..அச்சா'..என்று இவள் சொல்வதைப் பார்த்து அங்கே எல்லாருக்கும் ஒரே சிரிப்பு..


"ஆறு மாசத்தில அச்சா சொல்ல கத்துண்ட்டியா?..ஒரே கேலி எல்லாரும்.


" ஏண்டி..அங்கே இத்தனை நேரம் உனக்கு ஃப்ரியா கிடைக்கிறதே..எதோ படிச்சு கிழிக்கணும்னு சபதம் போட்டுட்டு போனே..இப்போ..அதெல்லாம் அவ்வளவுதானா?..அக்கா .கொஞ்சம் கிண்டலாகக் கேட்டாள்..


புரியாத பாஷை பேசற ஊரில் நான் படற கஷ்டத்தை சொன்னால் இவளுக்கு எங்க புரியும்?..


மூட்டை முடிச்சு கட்டி ஊருக்குப் புறப்பட்டாச்சு..

..

வசந்தாவின் குடும்பமே ஸ்டேஷனில் கண்ணீருடன் அவளை வழி அனுப்ப காத்திருக்க..தஞ்சாவூர் ஸ்டேஷன் கொஞ்சம் வெள்ளத்தில் தான்  மிதந்தது.


ட்ரெயின் கிளம்ப சிக்னல் கொடுத்து லேசாக வண்டி நகர ஆரம்பிக்க..

' அப்பா..அப்பா.."..வசந்தாவின் குரல்

"அப்பா..அந்த வண்டியை நிறுத்துப்பா'...

திரு திரு என்று எல்லாரும் விழித்து..


என்னாச்சு இவளுக்கு..சந்தோஷமாகத் தானே ஊருக்கு கிளம்பினாள்..தெய்வமே இது என்ன சோதனைனு ப்ளாட்ஃபார்மில் கை காட்டியபடி நின்றிருந்த அவள் குடும்பம் கலங்க..

' ஐயோ அப்பா..டக்குனு அந்த புக் விக்கிற தள்ளுவண்டிலேர்ந்து எனக்கு ' முப்பது நாளில் இந்தி,மராட்டி கத்துக்கற புக்கை வாங்கி போஸ்ட்டல அனுப்புப்பா..'வசந்தா சொன்னது தான் தாமதம்..

வெங்கடேஷுக்கும் அப்போதுதான் உயிரே வந்தது..


"சரியான மக்கு'..அம்மாவும் அக்காக்களும் சிரித்தபடி அவள் சொன்னவற்றோடு சேர்த்து இன்னும் ஒரு நாலு மொழி புத்தகம் சேர்த்து வாங்கி அனுப்பினர்.


அப்புறம் என்ன..

தூங்கும் நேரம் தவிர , புத்தகமும் கையுமா தான்.


பம்ப் ஸ்டவ்வுடன் அவள் படிப்பு..அதான் முப்பது நாளில்..

பாரத மொழி பாதியையும் இப்போது கற்றுக் கொண்டு விட்டாள்.


அந்த குடியிருப்பில் இப்போது ஆஸ்தான மொழி பெயர்ப்பாளினி வசந்தா தான்.


பாபிஜி..பாபிஜி என்று அவளைச் சுற்றி எப்போதும் நண்பிகள்.


அங்குள்ள பள்ளிகளில் பல் மொழி வகுப்பு எடுக்க ஆரம்பித்தாள்.


ஃபாக்டரியில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரிந்த மொழிகளில் பாடம் சொல்லிக் கொடுத்தாள்.

வெங்கடேஷை விட..வசந்தா தான் அங்கே இப்போ பிரபலம்.


' சார்..நீங்க வசந்தா மேடம் ஹஸ்பெண்ட் தானே? ' அவன் அடையாளம் அவள் பெயரில் இப்போது.


ஒரு நாள் இவள் குக்கும் புக்குமாக இருக்கும் வேளையில் வெங்கடேஷ் எடுத்த  ஃபோட்டோ.. அவர்கள் அடுத்தடுத்து சென்ற பல குவார்ட்டர்ஸ் வீடுகளின் சுவரை அலங்கரித்தது.


அந்த விடுமுறைக்கு தங்கை ஜானுவின் குடும்பம் வந்திருந்தார்கள்.


" ஏன்க்கா..டீச்சர் ட்ரெயினிங் படிக்கணும்னு ஆசைப்பட்டியே..அத்திம்பேர் கிட்ட சொல்லவே இல்லையா? ..மெல்லிய குரலில் ஜானு ..

" அதெல்லாம் அப்போ..இங்கே வந்தப்பறம் நான் கற்றுக் கொண்ட விஷயம்.ஏராளம்.

இப்படி வேற வேற மொழிகள் கத்துண்டதால என்னால எல்லாரோடயும் சகஜமா பழக முடிஞ்சது. நிறைய மாணவர்களுக்கு உதவ முடியறது. இவருக்கோ கை நிறைய சம்பளம்.வரது. அதனால் என்னால முடிஞ்ச மொழிக் கல்வியை இங்கே பக்கத்தில் இருக்கும் கிராமக் குழந்தைகளுக்கு சொல்லித் தரேன்'..


அக்காவை ஆச்சரியத்துடன் பார்த்த ஜானுவை ..

' அடுத்தது அப்பா..ஜப்பான் சைனா எல்லாம் போனால் அதையும் கத்துக்க ஆரம்பிச்சுடுவாள் அம்மா..' கலாய்த்தபடி நுழைந்தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்  வசந்தாவின் மகன்  ஆதித்யா. 


"அடடே....ஒரு நாள் கூட இதைப் பற்றி தன்னிடம் சொல்லவே இல்லையே..'

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் என்பது மட்டுமல்ல..அதே கடமை தனக்கும் உண்டு என்று ..


' இவர்கள் பேச்சைக் கேட்டபடி தன் ரூமில் வேலை செய்து கொண்டிருந்த வெங்கடேஷ்  ..கூகிளில் இப்போது தேட ஆரம்பித்தான்

' டீச்சர் ட்ரெயினிங் கோர்ஸ்'..


அகிலா ராமசாமி

எண்: 1892

Curfew_kitchen

 #Curfew_kitchen


.

மொறு மொறு போதும்..கொஞ்சம்

மருந்தும் சாப்பிடுவோமே..


#சுக்கு_மல்லி_காபி..


"என் ஜீவன் பாடுது .

உன்னைத்தான் தேடுதுனு..


காலையில் தினமும் கண்விழித்தால்

நான் கை தொழும் தேவதை யம்மா..

என் ஃபில்டர் காஃபியம்மா..

இப்படி பாடிக் கொண்டிருந்த நான் எப்படி மாறிட்டேன்..


காஃபி இல்லாத வாழ்க்கை என்னதுனு சொன்னது போய்..

இப்போ சுக்கு மல்லி காஃபி இல்லாத வாழ்க்கை என்னதுனு பாட ஆரம்பிச்சிட்டேன்..


கோயம்பத்தூர் ஸ்டேஷனில்..கம கம..சுட சுட இந்த காஃபி குடிக்காமல்..

நான் ட்ரெயின் வாசப் படி ஏறினதோ இறங்கினதோ இல்ல..


அதனால் ..வீட்டில் எப்பவும் கிடைக்கும் ஒரு வஸ்துவாக..என்னை..வஸ்த்தாது ஆக்கியது..

இந்த காஃபி..


இப்போ இந்த அகிலாவுக்கு வந்த சோதனை..

டப்பா காலி..

என்ன செய்யலாம்னு தோணித்து..

நாமே செய்தால் என்ன?


அம்புட்டுதேன்..

அந்த பாட்டிலில் எழுதிய ingredients எல்லாம் என்கிட்ட டப்பாவுக்குள் தாச்சி தூங்கீ..


'நீ வருவாய் என நான் நினைத்தேன்" ..

மருந்து சாமான் எல்லாம்..

மகிழ்ச்சியில் துள்ள..

அப்புறமென்ன..


கடை பொடி..இனிமே நம்மகிட்ட..வாலாட்ட முடியாது..💪

செம்ம டேஸ்ட்..😋


பாருங்க..

இது மாதிரி எத்தனையோ விஷயங்கள் நம்ம ஃப்ரிட்ஜுக்குள்ளும், ஷெல்ஃபிலும் 

காலாவதியாகும் முன் எனக்கு கதி உண்டோனு பாட்டு பாடிக் கொண்டு இருக்கும்..


நிதானமா எடுத்து பாருங்க..

கரெக்டா..அதை உபயோகப்படுத்துங்க..


இந்த நேரம் நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.


கொத்தமல்லி விதை..2 ஸ்பூன்

கண்டந்திப்பிலி..2 or 3

அரிசி திப்பிலி..2

ஏலக்காய் 7 or 8

மிளகு..4 

கிராம்பு 2

சுக்கு.. ஒரு விரல் நீளம்

நாட்டுச்சக்கரை 3 spoon

கல்கண்டு..1 ஸ்பூன்

பனங்கல்கண்டு 1 ஸ்பூன்..


( எனக்கு sweet கொஞ்சம் தூக்கலா வேணும். I am sweet person you know😁)


எல்லாம் சேர்த்து லேசா வறுத்துக் கொண்டேன்..

சுக்கு..திப்பில் எல்லாம் கொஞ்சம் தனியா பொடி பண்ணிட்டு மிக்ஸியில் போட்டு சுத்தினேன்..


'மல்லி..மல்லி..

சுக்கு மல்லி..

காஃபி மணக்குதடினு' 

ஆடிப் பாடி ஆரோக்கியமா இருப்போம்..

அவள் வருவாளா?"

 நிலாமுற்றம் கதைக்களம்

சித்திரக்கதை..

14-07-21

" அவள் வருவாளா?"


"ஏங்க..ஞாபகம் இருக்குல்ல..

ஆபீஸ் முடிஞ்சு நேரா வீட்டுக்கு வந்துடுங்க..

 நம்ம  மாரியம்மன் கோயிலுக்கு போய்ட்டு,  வழக்கமா போகிற இடத்துக்கும் போய்ட்டு வந்துடலாங்க..கரெக்டா ஆறு மணிக்கு அங்கே இருக்கணும்..லேட்டாக்காதீங்க"..

 நானும் ஜானு குட்டியும் தயாராக இருப்போம்"..வாசலில் வழி அனுப்ப வந்த புவனா..கணவன் தியாகுவுக்கு கட்டளை இட்டுக் கொண்டிருந்தாள்.

 " ஏம்மா..மூணு வருஷமா..இதே நாள் ..இதே நேரம்.. தேவையா..யோசி'..

 சொல்லியபடி ஸ்கூட்டரை கிளப்பினான்.

அன்று ஆடி மூன்றாம் வெள்ளி.. பூஜை முடித்து,ஜானு குட்டிக்கும் சாப்பாடு கொடுத்து தூங்க வைத்தபின்னும், ஏனோ புவனாவுக்கு சாப்பிட மனமில்லை..

 ஏதோ ஒரு துக்கம் தொண்டையை அடைத்தது. ஜானுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 ஜானு குட்டிதான் அவள் உலகம்.

 

 டாண்ணென்று வந்தான் தியாகு.

 கைப்பையும், ஜானுவின் பையையும் அவன் காலுக்கடியில் வைத்தாள்.

 கோயிலிலிருந்து கிளம்பும்போது மீண்டும் கேட்டான் தியாகு..'  குழந்தையை அங்கே கட்டாயம் அழைச்சுக்கிட்டு போகத்தான் வேணுமா?"..

 அவள் மெளனம்.. அவனுக்கு புரிந்தது.

 அதோ..மதுரைக்கு செல்லும் ரயில் எப்போதும் போல அந்த இடத்தில் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தது.

 ஊருக்குள் செல்லும் பலர் ,இங்கேயே வண்டியிலிருந்து குதித்து இறங்கி நடையைக் கட்ட ஆரம்பிப்பார்கள்.


 புவனாவும் தியாகுவும் கூட இப்படித்தான். ஸ்டேஷன் சென்று வீட்டுக்கு போகும் நேரத்தை விட,இந்த வழி சுலபம் என்று குதித்து நடக்க ஆரம்பித்து விடுவார்கள்..


அங்கே வந்து நின்றதும்.புவனாவின்  நினைவு பின்னோக்கி நகர்ந்தது.


 நான்கு வருடத்துக்கு முன் , இதே போல ஒரு இரண்டாம் ஆடி வெள்ளிக்கிழமை

 மதுரைக்கு செல்லும் அந்த ரயிலில் , புவனாவும் தியாகுவும் தங்கள் இறங்கும் இடம் வரக் காத்திருந்தார்கள். அன்று ஏனோ கூட்டமே இல்லை.

 

 அப்போது ஒரு குழந்தையின் அழும் குரல் எங்கிருந்தோ கேட்டது.

 சத்தம் வந்த அடுத்த பெட்டி நோக்கி நடந்தார்கள். யாருமே இல்லை ..ஒரு பிஞ்சுக் குழந்தை மட்டும் அங்கே.

 ' யாருங்க அங்கே..குழந்தை அழுகிறதே..வந்து பாருங்க..'..

 அவர்கள் இருவருக்கும் பதில் சொல்ல யாரும் அங்கில்லை..

குழந்தையை அங்கே தனியாக விடவும் மனமில்லை.

" இங்கே இறங்க வேண்டாங்க..ஸ்டேஷன்ல போய் இறங்கலாம். அதுவரைக்கும் இந்தக் குழந்தையோட இருக்கலாம். அவங்க அப்பா இங்கே தான் இருப்பாங்க"


வண்டியிலிருந்து இறங்கி, ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் நோக்கி நடந்தார்கள்.


தியாகு ரயில்வே பணியில் இருப்பதால், அங்கு ஸ்டேஷன் மாஸ்டரிடம் விவரத்தை சொன்னான். 

" பச்சிளங் குழந்தை சார். எங்க வீட்டுக்கு எடுத்துட்டு போறோம். யாராவது வந்து கேட்டால்,எங்க வீட்டுக்கு அனுப்புங்க..'..

குழந்தையை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.


ஜானு என்ற பெயர் சூட்டி,அந்த வீட்டில் ஜம்மென்று வளர்ந்தாள்.

குழந்தையில்லாத அவர்கள் வீட்டில், கொஞ்சி விளையாட ஒரு ஜானு கிடைத்த மகிழ்ச்சியில் தியாகு புவனாவின் நாட்கள் பறந்தது..


போலீஸ் ஸ்டேஷனுக்கு பல முறை அலைந்தது தான் மிச்சம். குழந்தையைக் கேட்டு யாரும் வரவே இல்லை.


ஆனாலும், வருடா வருடம் இந்த நாள், குழந்தையைத் தூக்கிக் கொண்டு ரயில் வந்து நிற்கும் நேரம் வந்து விடுவாள்.

ஜானுவைப் பெற்ற தாய் வந்து காத்திருப்பாளோ என்ற ஒரு உணர்வுதான் காரணம்..


இன்றும் அதே போல வந்தாள்.

யாரும் அங்கே காணவில்லை..

அந்தி மயங்கும் மாலையில், தன் வாழ்வின் ஒளி மங்கி விடுமோ என்ற பயத்தில் இருந்தாள் புவனா..


ரயில் கிளம்பத் துவங்கியது.

குழந்தையை இறுக்க அணைத்தபடி

 வேக வேகமாகத் திரும்பி வந்தவள்..நிம்மதி பெருமூச்சுடன்..' அங்கே யாரும் இவளைத் தேடி வந்து நிக்கலைங்க' ..

 சந்தோஷமும் நிம்மதியும் கலந்த கண்ணீருடன் நின்றாள் புவனா..இங்கே..

 

 

அங்கே..

கிளம்பிய ரயிலின் பெட்டியிலிருந்து இரண்டு கண்கள்..ஆனந்தக் கண்ணீரில்..


வளர்ப்பு அம்மாவின் தோளில் இருந்து தன்னை  திரும்பிப் பார்க்காத , ஜானுவுக்கு கை காட்டியபடி..


அகிலா ராமசாமி

எண்; 1892

என்ன_பொருத்தம்

 #படம்_பார்த்து_க(வி)தை

#பதிவு_1


#என்ன_பொருத்தம்


மெட்ரோ ரயிலில் சந்திப்பு

மேட்ரிமோனி எதுவும்  இல்லாத ..

மேட்ச் மேக்கர்ஸ் மூக்கு நுழைக்காத..

மனசு மட்டுமே பொருந்திய மேரேஜு..


Match நல்ல match என்று

அட்சதை போட்டு வாழ்த்து..


மூட்டையும் கட்டியே...

"Mail" ல்  ஊரை விட்டு கிளம்பியாச்சு..

"Express" போல வாழ்க்கை..

"Duronto" வேகத்தில் நிற்காமல்..நீர் ஓட

துரத்தித் துரத்தி நானுமிங்கே..


March past ல் ஓடி ஓடி..என்

மூச்சும் நின்னுடும் போல இருக்கே..


"சப்தபதி'யையே..

"சதாப்தி" வேகத்தில் சுத்தினவரு நீரு..

இப்போ..சஷ்டி 

அப்தபூர்த்தி வரப்போகுது..

அட்டகாசம் ஓயலையே..


 பைக்கை தேடி ஓடுறீரே..

 கைப்பையைத் தூக்கி ..

 வைஃப் நானு ஓடியாறேன்..

 லைஃப் பார்ட்னரே..நில்லும்மையா..


மனசுக்குள்ளே சிரிச்ச மச்சான்.

மனக்கணக்கு  போட்டாரே..


" பாரியாள்" உன் பாதம் நோக..

பர்த்தா நானும் விடுவேனா..?


வேகமாக போவேனே..

வாகனத்தில் வருவேனே..

பாதி தூரம் நீ கடக்குமுன்னே..

பில்லியனில்.. உன்னை அமர வைப்பேனே..😀😀


எப்படி என் ஐடியா..என்றே..

ஐயாவும் ....கேட்க..

அசடு ரொம்ப வழியாதீரும்..

ஆடு ஒண்ணு பாக்குதங்கேனு..

அம்மணியுஞ் சொன்னாளாம்..

சென்னை

 #ஸண்டே_ஸ்பெஷல்

#சென்னை

காவேரிக்கரையில் பிறந்து..கூவம் நதிக்கரை வந்து சேர்ந்தபோது குழப்பம் தான் ரொம்ப அதிகம்.


படபடக்க வைத்த பட்டிணம் தான்..கூட்டுக்குள் புழுவாய் இருந்த என்னை..பட்டாம்பூச்சியாய் பறக்க வைத்தது நம்ம மெட்ராஸ் தானுங்கோ..


குரோம்பேட்டை ராதா நகருக்குள் ஒரு #மினி_இந்தியா

#பாரத_விலாஸ்


 குருவிக்கூடு வீடு தான் எங்கள் சொர்க்கம்.

சுருள் மாடி வீடு  ..சிம்ப்பிள் அடையாளம்.

மூன்றடுக்கு மாடி..


One India அப்போதே கண்டேன் அங்கிருந்த ஒன்பது வீடுகளில்..


சுந்தரத் தெலுங்கு கேட்கும் ஒரு வீட்டில்..

மலையாள மணம் வீசும் ஒரு வீட்டில்

மார்வாடி ஆண்ட்டியின் சப்பாத்தி சப்ஜியின் மணம் இன்னொர் வீட்டில்..

தம் ஆலு காந்தமாய் இழுக்கும் ஒரு வீட்டில்..

பிஸுபேளா..ப்ளேட்டில் தருவர் ஒரு வீட்டில்..

அன்புக்கு பஞ்சமில்லை..

பயமொன்று இருந்ததே இல்லை..


#கற்றதும்_பெற்றதும்_ஏராளம்.


வீடு பெரிசா இருந்தாலும் மனசு சின்னதாக இருக்கும் இந்த உலகத்தில்..

வேலைக்கு போகும் அம்மாக்களின் குழந்தகளை எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி தன் குழந்தைகள் போல பார்த்துக் கொண்ட வீட்டுக்கார மாமியின் #வாத்ஸல்யம்.


பாட்டியின் புடவைத் தலைப்பில் ஒளிந்திருந்த நாட்கள் போய்..

வாழ்க்கைப் பாடம் கற்றுத் தந்த பட்டணம் இது.. என் வாழ்வில் #பட்டறையாய்..


பரீட்சையில் மார்க்கு வரதுக்கு முன்னாடி..ராமாஞ்சனேயர் கோவிலும்..ஸ்டேஷன் ரோட் பிள்ளையார் கோயில் என வளர்ந்தது #பக்தி.


மாம்பலம் போவது என்றால் #Manhattan போன ஸ்ரீதேவி மாதிரி..ட்ரெயின் ஏறி..foot board நின்று காற்று வாங்கிய #சந்தோஷம்.


சங்கீதம் என்பது ஸ்வரங்களின் ஜாலம் மட்டுமல்ல...அது ஒரு #தியானம்

என்று சொல்லிக் கொடுத்த வீணை மாமி.


வடாம்களுக்கு காவலோடு..விடலை அக்கா அண்ணாக்களுக்கு.. மெசெஞ்சர்..ஸ்பை..எல்லாமே எங்க வாண்டு க்ரூப்பு தான்.

அந்தக் கால 'அஞ்சலி' படம் போல எங்கள் அட்டகாசமான கூட்டம்.


நட்பு வட்டம்..நட்பு சங்கிலி..துவங்கியது இங்கே தான்.


Restaurants அப்போதெல்லாம் ஒன்று கூடகிடையாது..swiggy க்கு எதிர்பாக்காது ரெஸ்ட்டே எடுக்காமல் ..

அம்மாக்களின் கைமணத்திலும் காரியங்கள் கற்றபடி #வளர்ப்பு.


'வெற்றி'யின் வாசலில் அடிக்கடி நின்றதாலோ என்னவோ..

MIT..மண்ணைக் கூட மிதிச்சதில்லை.


முக்கியமாக..

வாழ்க்கையில் கடல் தண்ணீர் தவிர..உப்பு தண்ணீர் என்பது பைப்பிலும் வரும் என்ற உண்மை புரிய ..

ஒரு குடம் நல்ல தண்ணிக்கு...நடையாய் நடந்தது...தண்ணீர் சேமிப்புக்கு வித்தானது..


கிரோம்பேட்டை ..குறும்புடன் கூடிய கதம்ப வன வாச எண்ணங்களுடன் இன்றும் மனசில் .


எத்தனை வரவேற்புகள், எத்தனை வழியனுப்பதல்..கண்ட இந்த எங்க குடும்பத்து ஸ்டேஷன் இந்த கிரோம்பேட்டை ஸ்டேஷன்.


என் வாழ்க்கைப் பயணமும் தடம் புரளாமல்  சில நேரம் கூட்ஸ் வண்டி போலவும், சில நேரம் தடக் தடக் பயணமாக இருந்தாலும் இலக்கை அடைந்தே தீரணும்னு திடம் தந்த புடம் போட்ட இடம்.


புலம்பலில்லை..பொழுது போனதே தெரிந்ததில்லை.


க்ரோம் லெதர் கம்பெனிகள் இருந்ததால்  இந்தப் பெயர் வந்தது என்றால்..அவர்கள் தள்ளி விட்ட கழிவு நீர் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது ஒரு காலத்தில் என்பது ஒரு வருத்தமே..இப்போது இல்லை என்று நினைக்கிறேன்.


கிரோம்பேட்டை க்கு #கும்மி அடித்து ஒரு #குறவஞ்சி பாடிட ஆசையும் தோணுது..

அமானுஷ்யமா

 அமானுஷ்யமா..தெரியவில்லை..

எனக்கு ஒரு அனுபவம் என்றே சொல்வேன்


1993. டிசம்பர் கடைசியில் ஒரு மத்தியானம்.

சுருக் சுருக்னு லேசா வலி.. ஒண்ணும் புரியல.


இன்னும் 15 நாளிருக்கு டெலிவரிக்கு என்று இரண்டு நாள் முன்னாடி கூட டாக்டர் சொன்னாரே? கொஞ்சம் கலவரம்.


அம்மா ஆஃபீஸ் போய்ட்டதால் துணைக்கு இருந்த சித்தி ஜீரகக் கஷாயம் கொடுத்தும் ஒண்ணும் முடியல.


அப்போதெல்லாம்..அஸ்தினாபுரத்திலேர்ந்து ஒரு ஒரு ஆட்டோ கிடைக்கணும்னா..உலக மகா கஷ்டம்.

டிராவல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மியும் கூட

ஒரு வழியா ஒரு ஆட்டோ கிடைக்க குலுக்கலுடன் ஒரு பயணம்.


MIT gate ..மூடினால் திறக்கவே திறக்காது. எங்க சித்தி எல்லா ஸ்லோகமும் சொல்லிண்டே வர..கேட்ட வரம் கிடைத்தது .'கேட்டு'ம் திறந்தது.


குண்டும் குழியும் ரோட்டில்  ஆடி ஆடி..ஒரு வழியாக st.Thomas Mount gate வந்தாச்சு. பழவந்தாங்கலில் இருக்கும் ஒரு மகப் பேறு மருத்துவமனைக்கு போகணும்.


அங்கே..இம்மி கூட நகர முடியாமல் அப்படி ஒர் traffic. gate repair என்பதே நாங்கள் இருந்த தூரத்திலிருந்து அறிய ஒரு மணி நேரம் ஆச்சு. நேரம் கடக்க..கடக்க..படு பயம் .


இதுவரை போன போதெல்லாம் பழவந்தாங்கலுக்கு train ல போய் இறங்கி அங்கேர்ந்து பொடி நடையில் போய்டுவேன். இந்த Mount வழி ஆட்டோக்காரருக்கும் தெரியல.


சைடில் ஒரு ஆட்டோ.. அதுக்குள்ள ஒரு மத்திய வயது பெண்மணி. சித்தியுடன் பேச்சு கொடுத்தார்கள். 

நிலைமை பார்த்து ..' ஒண்ணும் கவலைப் படாதீங்கோ..அந்த அம்பாள் ஒரு குறையும் வெக்க மாட்டா..கேட்டு திறந்திடும் ..என் பின்னாலேயே வந்துடுப்பா..நான் வழி காண்பிக்கிறேன் என்று சொன்னபடி.


சிறிது நேரத்தில் வண்டிகள் நகரும் சலசலப்பு. இன்னிக்கு திறக்கவே திறக்காது என்ற கேட் திறந்து..அந்த மாமியின் ஆட்டோ முன்னே..நாங்கள் பின்னே.

கொஞ்ச தூரம் பயணம் அவர்கள் வழிகாட்டலில். 

ஆட்டோவிலிருந்து தலையை வெளியே நீட்டி..' இதோ ஆஸ்பத்திரி அடுத்த கட்டடம் தான்.

பொண்ணு பிறந்தா மறக்காம 'ராஜேஸ்வரி' நு.பேர் வெச்சுடுங்கோ காற்றில் மிதந்த பெயர்.


thanks maami என்று தலை நீட்டி என் சித்தி சொல்ல ஒரு நொடியில் எந்த சந்தில் நுழைந்தது் அவர்கள் சென்ற ஆட்டோ புரியலை..


இதெல்லாம் சரி.. 

புண்யாஹ வாசனம் நாள்.

மாமியார் வந்தார்கள் ஊரிலிருந்து. 

அம்மா கேட்டாள் ' மாமி பேத்திக்கு என்ன பேர் வைக்கப் போறேள்.?

அவள் சொன்ன பெயர்..?

' ராஜேஸ்வரி'..!!!

( இப்போது போல ஃபோனில்லை..அம்மாவுக்கு நடந்த எந்த விஷயமும் தெரியாது..அவர்கள் பழவந்தாங்கல் போனது கூட இல்லை..

எப்படி?

இன்னும் கேள்வி என் மனசில் உண்டு?

கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு

 கூட்ஸ் வண்டியிலே..ஒரு காதல் வந்துருச்சு


 '25 தானே.'.

இல்ல்..லை 32..

டாட்டா காட்டி முடித்தபின் ..தொடங்கும் டிஷ்யூம்..டுஷ்யூம்..தோழிகளுடன் எப்போதும்.

என்னிக்கு ஒழுங்கா எண்ணி இருக்கோம் இந்த பாரம் ஏற்றி..ப்ளாட்ஃபார்மில் ஊர்ந்து செல்லும் கூட்ஸ் வண்டி பெட்டிகளை

  tally ஆனதே இல்லை..

சில இடத்தில் பாரம் குறைக்கப்படும்..சில இடத்தில் ஏறும்..

சில நேரம் வேகம்..சில நேரம் ஊரல்..

வண்டியும் சொல்லும் வாழ்க்கைப் பாடம்..

அரைக்கிழம் ஆனபோதும்..

ஆசை விடுவதில்லை..

ஆடி அசைந்து செல்லும்..

பெட்டிகளின் கணக்கு

பெரும் புதிரே என்றுமெனக்கு..

ஒண்ணு.இரண்டு ..மூணு..

எண்ணத் தொடங்க..

அம்மா..ப்ளீஸ் என்றாள்..

அவளுக்கென்ன தெரியும்..

அதிலிருக்கும் மகிழ்ச்சி..

அடப்போடா..

யார் பார்த்தால் என்ன..

தொடர்ந்தேன்..

நாலு..அஞ்சு..ஆறு..


கடைசி பெட்டி போயாச்சு..கணக்கு மட்டும் இன்னும் முடியல..போன வண்டியும் திரும்பி வராது..

கடைசி மாசமும் முடிவுக்கு வரப்போக..

கடந்த நாட்கள் கசப்போ..தித்திப்போ..

போனது போகட்டும்..

புதுசாய் துவங்குவோம்..

புது வருடக் கணக்கை

Advance happy new year friends

எங்கே அவள் என்றே மனம்..

 எங்கே அவள் என்றே மனம்..


ஏம்மா..டல்லா இருக்கே..ஊருக்கு போணுமேன்னா..நான் தான் winter vacation ல வரப் போறேனே..சமாதானம் சொல்ல..அதெல்லாம் இல்ல ..எனக்கு ஒரே ஒரு குறை..கம்ப்யூட்டர் use பண்ணவே தெரியலையே எனக்கு..சின்ன குழந்தைகளுக்கு தெரியறது கூட எனக்குத் தெரியலையே..so இதுதான் உன் mood off க்கு reason aa..ஏதாவது செய்யலாம் இரு.. சொல்லிட்டேனே தவிர..இன்னும் ஒரு நாள் தான் இருக்கு ஊருக்கு கிளம்ப..

ஆஃபிஸிலிருந்து வந்த பிராண நாதர் கிட்ட சொன்னேன்..ஜுஜுபி matter ..அந்த பழைய laptop ஒண்ணு இருக்கே ..அதை எடு.. சொல்லிக் கொடுத்துடலாம்.. மூணு மணி நேரம் class. இந்தாங்கோ..இனிமே இது உங்க laptop..enjoy ..என்றார்.


அம்மாவுக்கு ஒரே குஷி. சொன்னதெல்லாம் நோட்ஸ் எடுத்து வெச்சிண்டா.. doubt வரச்சே ஃபோன் பண்ணி கேட்டுக்கறேன்..ஊருக்கு போகறதுக்குள்ளே செம்ம practice.

ஊருக்கு போய் , laptop திறந்து நோட்ஸ் படி எல்லாம் step by step follow பண்ணி..

school student மாதிரி ஆனா..

சாப்பிட்டியா ல ஆரம்பிச்சு..எல்லாம் மெயில் தான்..எல்லாருக்கும் மெயில் மெயில் தான். ஓய்வூதியம் பத்தின எல்லா rules ம் அவள் விரல் நுனியில்.consultancy through mail தான்.

திடீர் திடீர்னு சந்தேகம் வரும் பொது எனக்கு ஃபோனெ வரும்..எதோ cookies..cookies நு வரதே..என்ன பண்ணனும்..அது Dehradun famous இல்லயோ..என்பாள்.its time to clean your PC ..என்ன பண்ணலாம்..அம்மா..விட்டுடு அதல்லாம் என்பேன்.


எல்லா நியூஸ் பேப்பரும் படிச்சுடுவா..முதல்ல பார்க்கிறது bullion rate. local, national, international news எல்லாம் படிச்சுட்டு எனக்கு update பண்ணிடுவா..அதோட ரொம்ப முக்கியம்.. சீரியல் எல்லாம் பாக்க கத்துண்டாச்சு..you tube ல எல்லா ஸ்லோகம் கேட்பது..Skype ல வாயேன்..பார்த்து ஒரு வாரமாச்சு என்பாள்..இப்படி வாழ்க்கையில் ஒரு புது தெம்போடு ஓடிக் கொண்டிருந்த நேரம்..

MND ( motor neuron disease) என்ற எமன்..

வரவேற்பில்லாமலே வீட்டில் நுழைந்தான்..

பேசித் தள்ளிய அம்மா..லேசா குழற ஆரம்பித்தாள். தண்ணீ கூட குடிக்க முடியல இப்பொ எல்லாம். ..கொஞ்ச வேலை பண்ணாலே ரொம்ப weak ஆ இருக்கென்றாள்..பட பட பேச்சு..குடு குடு ஒட்டம்..எல்லாவற்றையும் தூக்கிப் போட்ட கொடுரன் இந்த MND.

மருந்தே இல்லா..குணமே ஆகாத ஒரு அரக்கன்..சொட்டு சொட்டா அம்மா சுரத்தில்லாமல் போனாள். பேச்சு நின்றது.. பேச நினைத்ததெல்லாம் எழுதி எழுதி காண்பிப்பாள். சகோதரிகளுடன் பேசும் சந்தோஷம் நின்று..எல்லாருடனும் இறுதி மூச்சு வரை மெயிலில் தொடர்பு கொண்டாள்..

் அவள் கணினியில் எழுதி அனுப்பிய மடல்கள்..அதில் அவள் அன்பு, வாஞ்சை எல்லாம் கொட்டித் தீர்த்த விதம்..

இன்றோடு மூன்று வருடம் ஆச்சு..அவள் என்னை விட்டுப் போய்..

ஆனால்..இன்னும் எழும் கேள்வி..எந்த உந்துதல் அவளைக் கணினி கற்க வைத்தது? ஏன் இந்த அவள் முதல் முயற்சி ஒரு முடிவுக்கா..

விடை தெரியல..

மந்திரக்கதை

 #நிலாமுற்றம்_கதைக்களம்..

#மந்திரக்கதை..


#வள்ளி_காட்டிய_வழி


மதியம் 1 மணி..

செங்கல்பட்டிலிருந்து பீச் வரை செல்லும் மின்சார ரயில் ..தாம்பரம் ஸ்டேஷனில் சிறிது நேரம் இளைப்பாற நின்றது..


"வள்ளி..ஓடிப்போய் அங்கன பைப்பிலேர்ந்து இந்த பாட்டில்ல தண்ணி ரொப்பியாந்துரு..பக்கத்திலே குந்திகினு இருப்பாரே. அந்த சமோஸா விக்கற அண்ணன் கிட்ட ரெண்டு வாங்கியாந்துரு..'


வண்டியிலிருந்து இறங்கி ஓடினாள் வள்ளிக் குட்டி..


வள்ளிக்குட்டி..

அவள் அம்மாவுடன் தினமும் இதே ட்ரெயினில் காலையிலிருந்து இரவு வரை..அவள் அம்மா வேணியுடன்  பழ வியாபாரம் செய்வாள்.


இந்த நேரம் விட்டால் அப்புறம் சோறு தின்ன முடியாது..இந்தா..துன்னு..

வேணி அவள் தட்டை நிரப்பிக் கொடுக்க..


"அம்மா..தாயே..வயிறு பசிக்குதம்மா.."..


ஒரு வயதான தாத்தாவின் இந்தக் குரல்..

வள்ளிக் குட்டியை என்னமோ செய்தது..


கடகடனு எழுந்தவள்..

' இந்தாங்க தாத்தா..சாப்பிடுங்க'..

அவள் குரலில் இருந்த கருணை..

' ரொம்ப நன்றி கண்ணு..உன்னோட சோறைக் குடுத்துட்டியே கண்ணு'..

அவர் சொல்ல..

ஐயோ தாத்தா..எங்கம்மா வேற சோறு எனக்கு தரும்..உங்களுக்கு தெரியாதா என்ன?..ஒவ்வொரு 🍛 அரிசியிலும் அவரவர் பெயர் இருக்குமாம் உண்மையா தாத்தா..உங்களுக்குத் தான் இது..'

துள்ளிக் கொண்டு ஓடி விட்டாள்.


ஏம்புள்ள சோறு எங்க?..கேட்ட அம்மாவுக்கு அதோனு..தாத்தாவைக் காட்டினாள்..


மின்சார ரயில் கிளம்ப.." அக்கா..சூப்பர் டேஸ்ட்க்கா.." கொய்யாப்பழத்தை அங்கிருந்த பயணிகளிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.

 அந்த ரயிலில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் பலருக்கும் வள்ளி செல்லக் குட்டி..

பிறந்தநாள், வீட்டு விசேஷம் என்றால்..வள்ளிக்கு குட்டி குட்டியாக பரிசும் உணவும் கொண்டு வந்து தருமளவுக்கு.. வள்ளி அந்த ரூட்டில் பிரசித்தம்.


"அம்மா..கொஞ்சம் ஜாஸ்தி சோறு வைம்மா..இன்னிக்கும் அந்த தாத்தா வந்தாங்கனா..தரலாம் இல்ல.."..

வேணியும் அவளும் அரக்க பரக்க ரெயில் ஏற..


தாம்பரம்..

" அம்மா..பசிக்குது'..

அதே தாத்தா..புளி சோறு கை மாற..அவர் ப்ளாட்பார்மில் நடந்து ..ஒரு இடத்தில் உட்காருவதைப் பார்த்து..

அம்மா..இரு வரேன்..

ஓடினாள்.


" இந்தாப்பா.சாப்பிடு'..

தாத்தா..தன் கையிலிருந்த தட்டை..அங்கே நடக்க முடியாமல் வண்டியில் உட்கார்ந்திருந்த ஒரு பையனிடம் கொடுப்பதை பார்த்தாள் வள்ளி..


மூச்சு வாங்க ஓடி வந்தவள்.." தாத்தா..உங்களுக்கு பசிக்குதுனு சொன்னீங்களே?'..கேட்க..

"இது என் 👦 பையன் வீரா.. என் மனைவி இவன் பொறந்ததுமே கண்ணை மூடிட்டா..பிறவியிலேயே கால் ஊனம்'..

அவர் சொல்வது பாதி புரிந்து பாதி புரியாமல் இருக்க..

அங்கே ஒரு கப்பில் அரிசியும் , ஒரு சில கண்ணாடி குமிழ்களும், கீ செயின்களும் இருப்பதைக் கண்டாள்..


வண்டி விசில் கொடுக்கவே. ஓடிப் போய் ஏறிக் கொண்டாள்..

அடுத்தநாள்.. தாத்தாவின் தட்டை நிரப்ப..

"வள்ளி..இந்தா கண்ணு.. " நடுங்கிய கைகளுடன் அவர் அவள் கையில் எதையோ திணிக்க...


ஒரு கீ செயின்...அதன் நுனியில் கண்ணாடிக் குமிழில்.வள்ளி என்று அவள் பெயரை சிவப்பு நிறத்தில்  எழுதிய   🍛 அரிசி ஒன்று..


" இக்குணூண்டு அரிசிக்குள்ள இது  என் பேரா..தாத்தா?..துள்ளிக் குதித்து ஓடினாள்.


"அக்கா அக்கா இங்கே பாருங்களேன்..இதுல என் பேர் இருக்கு..'..

அந்தப் பெட்டிக்குள் எல்லாருக்கும் காட்டி மகிழ்ந்தாள்..


தாத்தாவும் வள்ளியும் இப்போ ரொம்ப நெருக்கமானார்கள்..


" தாத்தா..ஒரு அரை மணி நேரம் இவளைப் பார்த்துக்கோங்க..நான் ஒரு சீட்டுப் பணம் கட்டிட்டு ஓடியாந்துடறேன்..'..

தாம்பரம் ப்ளாட்பார்மில் வள்ளியை விட்டு ஓடினாள் வேணி.


 "வீரா அண்ணா..நான் சொல்ற பேரெல்லாம் அரிசில எழுதித் தரீங்களா?'..

கீதா,ராணி,பாக்யா,சிவா..

பெயர்களை அவள் அடுக்கிக் கொண்டே போக.....


கடகடவென்று வீரா ஆசையாக செய்து கொடுத்தான்..


அவள் அம்மா வர..ட்ரெயினில் ஏறியவள்..

கீதாக்கா..இந்தாங்க..உங்களுக்கு..


அங்கே உட்கார்ந்திருந்த அவள் ரயில் ஸ்னேகங்களுக்கு கொடுக்க..

" ஐயோ..எவ்வளவு அழகா இருக்கு?..


ஹேய்..வள்ளிக் குட்டி..இந்தா..'..

அவள் கொடுத்த அரிசி கீ செயினுக்கு ஆளாளுக்கு ஐந்து பத்து ரூபாய் என்று கொடுக்க..

'வேண்டாங்க்கா..' என்று நெளிந்தவள்..கை நிரம்பியது.


அடுத்த நாள்..

எப்போதும் போல தாம்பரம் ஸ்டேஷன்..

தட்டில் சோற்றுடன்.. தனக்கு கிடைத்த பணத்தையும் சேர்த்து கொடுத்தாள்..

" உன் கையால சோறு போதும்மா..காசு வேணாம்'..

தாத்தா சொல்ல...


" ஒவ்வொரு அரிசியிலும் அவங்கவங்க பேரு எழுதித் தாங்க வீரா அண்ணா..'..


பழத்தோடு இப்போது அவள் அரிசி கீசெயினுக்கும் ஏக டிமாண்ட்..


உட்கார்ந்த இடத்திலிருந்து..வீரா பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்..அவனுக்கு கை வந்த கலை கொண்டு..


ஆனால்..இன்னும் தாத்தாவுக்கு வள்ளிக் குட்டியின் கையிலிருந்து சோறு வாங்கிச் சாப்பிட்டால் தான் திருப்தி..


"தேவதை..ஒரு தேவதை..பறந்து வந்தாள்.."

எங்கோ ரேடியோவில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது..


அகிலா ராமசாமி

எண் 1892

சும்மா..ஒக்கார முடியல..

 சும்மா..ஒக்கார முடியல..


காபி டீ போண்டா கூவல் ஒருபுறம் .

காள்  காள் கத்தும் சத்தம் மறுபுறம்


சிணுங்கும் செல்ஃபோன்  காதோடு ஒருபுறம்

சின்ன குழந்தை செல்லம் மறுபுறம்


சீனியர் சிட்டிசன் சீற்றம் ஒருபுறம்.

சீறிப்பாயும் சிறுபிள்ளத்தனம் மறுபுறம்..


குறட்டை விட்ட் கூட்டம் ஒருபுறம்.

கூவி வித்ததை கொறித்தது மறுபுறம்..


ஊர்க்கதை பேசிய உறவுகள் ஒருபுறம்..

உப்பு பெறாததை ஊதியது மறுபுறம்..


வயதான அம்மா..வாஞ்சை ஒருபுறம்..

வாயத் திறவென மிரட்டல் மறுபுறம்..


ஆபீஸ் வேலையில் ஆழ்ந்தோர் ஒருபுறம்..

அனந்த பத்மனாப சயனம் மறுபுறம்..


விடாது ஒலித்த ஒம் பூர்புவஸ்வ ஒருபுறம்..

விட்டதை பேசியே வீணான காசு மறுபுறம்..


வருமான வரி விவரித்தல் ஒருபுறம்

வரிசையில் நிக்கணுமே கவலை மறுபுறம்


அடைபட்ட இருக்கையில் நெளிந்தது ஒருபுறம்..

கொட்டுதா மழை யங்கே..கேள்வி மறுபுறம்..


சென்ட்ரல் வந்ததும்

சிதறும் இக்கூட்டம்..

சுவாரசியம் என்றும்..இந்த

சிக்கு புக்கு ரயில் பயணம்

Retro

 #ஸண்டே_ஸ்பெஷல்

#ரெட்ரோ..


' இந்தாங்கோ..இன்னிக்கு வந்த கடுதாசி..'..


பாட்டி தருவாள்.


கடிதத்தை  பிரித்து படித்து..தாத்தா  சொல்ல்ப் போகும் விஷயத்திற்காக ஆவலுடன் பாட்டியுடன் சேர்ந்து நாங்களும் காத்துக் கொண்டிருப்போம்.


பாட்டிக்கு படிக்கத் தெரியாது என்றெல்லாம் இல்லை... அது என்னவோ ஒரு discipline. 

"வெள்ளிக்கிழமை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ல  விசாலம் வராளாம்...'

இந்த வாசகம் கேட்டதும் என் காதில் தேன் வந்து பாயும்..

ஏன் தெரியுமா..?..


விசாலம் வந்தா என்ன..விச்சு வந்தா என்ன?..

நமக்கு ரயில்வே ஸ்டேஷன் போகறதுக்கு ரொம்ப பிடிக்கும்..


திருச்சி ஜங்ஷனுக்கு  டாண்ணு அஞ்சு மணிக்கு முன்னாடியே ட்ரெயின் வந்துடும்..


மெளனராகம் தங்கை மாதிரி..' தாத்தா..தாத்தா..நானும் உங்க கூட ஸ்டேஷனுக்கு வரேனே'...


" காலங்காத்தால..பனியில எதுக்கு?..

பாட்டி இழுக்க..

திருச்சில என்ன பனி..அவ வரட்டும்..

தாத்தா..green signal கொடுக்க..


வீட்டுப்பாடம் எல்லாம் சூப்பரா முடிச்சு வைச்சு..

நாலு மணிக்கே எழுந்து குளிச்சு முடிச்சு..fresh aa ready ஆகி..தாத்தாவோட 🚲 சைக்கிள் பின்னாடி உட்கார்ந்து..அப்படியே ஜில்லுனு அடிக்கும் காற்றை எஞ்சாய் பண்ணி..


ஆஹா..


தாத்தா 🚲 ஸ்டாண்ட்ல வண்டியை நிறுத்திட்டு வரதுக்குள்ள..ஓடிப் போய் பிளாட்பார்ம் டிக்கட் வாங்கிண்டு வர..

" கடவுளே..கடவுளே..ஒரே ஒரு goods வண்டி வரணுமே..' 

ஒண்ணு ரெண்டு மூணுனு எண்றதில இருக்கற சுகம் இருக்குப் பாருங்க..

அன்னிக்கு ஸ்கூலில் போய் பெருமையா சொல்லிக்கலாமே..


காஃபி காஃபி..இட்லி வடை பொங்கல்..

கமகமனு மூக்கைத் துளைக்கும்.


கறந்த பாலில் ☕ பாட்டி சுடச் சுடச் காஃபி கலந்து வெச்சிருப்பா..மனசு..சமாதானம் பண்ணும்.


ஆனா..அந்த இட்லி வடை பொங்கல் வாசனை இருக்கே..

மூக்கு ..மூணு முழம் நீளும்.. ஜொள்ளு..ஜொள்ளு..ஜொள்ளோ..

ஜொள்ளு..😋😋😋😋


ம்ம்ம்ம்ம்..அதெல்லாம் எங்க..

வீட்டுக்கு போனால்.. பாட்டி பண்ணி வெச்சிருக்கும் இட்லியும் வெங்காயச் சட்னியும் ரெடியா இருக்கும்..

இருந்தாலும்.....


🏀 🍪 பிஸ்கட்  வண்டி....ஆஹா..😛😛😛


தாத்தா..கருமமே கண்ணாயினாரா..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்..🌻ஸ்டேஷனில் காத்திருக்கேன்னு..'..

காதை தீட்டி announcement க்கு காத்திருப்பார்..


அடிக்கடி இப்படி கூப்பிட போவதால்..எந்த பெட்டி எந்த எடத்தில நிக்கும்னு எங்களுக்கு மனப்பாடம்.


அதுக்குள்ள..


"மெட்ராஸ் ஸே ஆனேவாலி ராக்ஃபோர்ர்ட் எக்ஸ்பிரஸ்..'....ஹிந்தியில் அறிவிப்பு வர..

அட்டென்ஷன் mode க்கு போய்டுவோம்.


ஒரு வழியா ட்ரெயினேலேர்ந்து பார்ட்டிகள் இறங்க ..

' நான் தூக்கறேன்..நான் தூக்கறேன்னு' ஒரே ஓவர் enthu..வில் இருப்பேன்..

ஒவ்வொரு ஊரிலேர்ந்து வருபவர்கள் பையில் ஒவ்வொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்குமே..


தாத்தா சைக்கிளில் இரண்டு பை மாட்ட..

வந்த அத்தையோ..பாட்டியோ..சித்தியோ..

ஓடிப் போய் TST பஸ்ல உட்கார்ந்துடுவோம்.


செல்லாத்தா..செல்ல மாரியாத்தா..பாட்டு ஆரம்புச்சு..

கரெக்டா நாம் எறங்கும் போது..

"வசந்த கால நதிகளிலே..வைர மணி நீரலைகள்.." கமலும் ஸ்ரீதேவி யும் கண்ணில் தெரிய..

கோர்ட் ..எறங்கு எறங்குனு..கண்டக்டர் கூவ..

மூட்டை தூக்கி வீட்டுக்கு வந்ததும்..

அந்தப் பைக்குள்ள எல்லாம் என்ன இருக்கும்னு மனசு ஆலாய்ப் பறக்கும்..


" காஃபி உறிஞ்சபடி ..எல்லாரும் வட்டமாய் உட்கார்ந்து ஊர்க் கதை கேட்போம்'..

" கிளம்பு..கிளம்பு..சாயங்காலம் பார்க்கலாம்னு..விரட்ட ..சோகமா ஸ்கூலுக்கு கிளம்புவேன்..


நமக்குதான் guide duty. மலைக்கோட்டை..ஸ்ரீரங்கம் திருவானைக்கா எல்லாம் வந்தவர்கள் கூட போகணும்..

அப்படியே..

"இங்கே சமோஸா சூப்பரா இருக்கும்னு.".சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் காண்பித்து சொல்ல..ஹி..ஹி..ஹி..😃😃😃😃


தெப்பக்குள பஜ்ஜி மாமா..' ஏன் மாமி ரெண்டு வாங்கிண்டு போங்கோளேன்" சொல்ல..💪💪💪😀😀

..

ஆஹா..ஓஹோ..ஹே..ஹே..ஹே தான்..


அந்த கொண்டாட்ட நாட்கள்..


வந்த பார்ட்டி வேற வழியில்லாமல் வீட்ட்ல இருக்கும் டிக்கட் எண்ணிக்கை கேட்டு..

பொட்டலம் அங்கே கட்டப்பட..


வீட்ல ..பாட்டி சமையல் கெஸ்ட்டுக்கு..😃😃

பார்ட்டி தந்த சொந்தத்தை வாழ்த்தி..நாங்க சிந்து பாடுவோம்ல..


அவங்க கிளம்பும் நாள் வரும்..


வீட்ல இருக்கற எல்லாரும் ஆளுக்கொரு மூட்டை எடுத்து..இப்ப்போ மாவடு மாகாளினு ,நார்த்தங்காய்னு பைகள் ரொம்பி..

ஏலேலோ ஐலஸா பாடி பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டு..

அப்படியே ஸ்டேஷனுக்கும் போய்..

கட்டை சீட்ல உட்கார்த்து வைத்து..😭 கண்ணீர் மல்க..விடை கொடுத்து..ட்ரெயின் கண் மறையும் வரை கைகாட்டி, கார்டுக்கும் டாடா காட்டிவிட்டு 

வீட்டுக்கு வர..


வீடே வெறிச்சுனு போய்டும்.அடுத்து வரும் லெட்டர்..அடுத்து வரப் போகும் ஆள் யாருனு..ஆவலாய்க் காத்திருப்போம்..


ஊரிலேர்ந்து வருபவர்கள் மட்டுமல்ல...பக்கத்து ஸ்டாப்பில் வீடு இருக்கும் சித்தி வந்தாலுமே..பஸ் ஸ்டாண்டுக்கு ஓடிப் போய் கூட்டிக் கொண்டு வர நிற்பது....


இரு இரு அடுத்த பஸ்ல போலாம்னு ..பஸ்

ஸ்டாப்பில் நின்று..விட்டுப் போன கதை பேசி..


இப்போ எல்லாம் இதெல்லாம் சாத்தியமா?..

' ஊருக்கு வரேன்னு'வாட்ஸப்பில் மெசேஜ் வர..கூகுள் மேப்பில் வழியை அனுப்பி விட்டு நம்ம வேலையைப் பார்க்க போய் விடுகிறோம்.


' வெளியே போகணுமா..ஓலா ஊபர் app  இருக்குல்ல..அதுதான் செளகரியம்.'..என்று நழுவி விடுகிறோம்..


வட்டமா உட்கார்ந்து..அப்ப்டியே ஒரு நாலு வேர்க்கடலையை மென்று கொண்டு..வந்தவர்கள் பேசறதை...ஆசையாகக் கேட்ட காலம் இனி வருமா?


 நொடிக்கொரு தகவல் பரிமாற்றம் இருப்பதால்..

யாராவது வந்தால் கூட..அதான் தெரியுமே..நீ போன இடம் பேசின பேச்சுனு...உன் status ல பார்த்துட்டேன்..bye ..சொல்லி கிளம்பிடறோமே....


என்னமோ போங்க..

வரவேற்பும் இல்லை..வழி அனுப்புதலும் இல்லை..

அவங்கவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு..


ஆனால்..எனக்கு இன்னிக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம்..ஸ்டேஷனோ பஸ் ஸ்டாப்ப்போ..போய் நின்னு கூட்டிக் கொண்டு வருவது..

டாடா காட்ட போறது ....😃😃😃

..


ரெட்ரோ..