Sunday, July 3, 2022

அமானுஷ்யமா

 அமானுஷ்யமா..தெரியவில்லை..

எனக்கு ஒரு அனுபவம் என்றே சொல்வேன்


1993. டிசம்பர் கடைசியில் ஒரு மத்தியானம்.

சுருக் சுருக்னு லேசா வலி.. ஒண்ணும் புரியல.


இன்னும் 15 நாளிருக்கு டெலிவரிக்கு என்று இரண்டு நாள் முன்னாடி கூட டாக்டர் சொன்னாரே? கொஞ்சம் கலவரம்.


அம்மா ஆஃபீஸ் போய்ட்டதால் துணைக்கு இருந்த சித்தி ஜீரகக் கஷாயம் கொடுத்தும் ஒண்ணும் முடியல.


அப்போதெல்லாம்..அஸ்தினாபுரத்திலேர்ந்து ஒரு ஒரு ஆட்டோ கிடைக்கணும்னா..உலக மகா கஷ்டம்.

டிராவல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மியும் கூட

ஒரு வழியா ஒரு ஆட்டோ கிடைக்க குலுக்கலுடன் ஒரு பயணம்.


MIT gate ..மூடினால் திறக்கவே திறக்காது. எங்க சித்தி எல்லா ஸ்லோகமும் சொல்லிண்டே வர..கேட்ட வரம் கிடைத்தது .'கேட்டு'ம் திறந்தது.


குண்டும் குழியும் ரோட்டில்  ஆடி ஆடி..ஒரு வழியாக st.Thomas Mount gate வந்தாச்சு. பழவந்தாங்கலில் இருக்கும் ஒரு மகப் பேறு மருத்துவமனைக்கு போகணும்.


அங்கே..இம்மி கூட நகர முடியாமல் அப்படி ஒர் traffic. gate repair என்பதே நாங்கள் இருந்த தூரத்திலிருந்து அறிய ஒரு மணி நேரம் ஆச்சு. நேரம் கடக்க..கடக்க..படு பயம் .


இதுவரை போன போதெல்லாம் பழவந்தாங்கலுக்கு train ல போய் இறங்கி அங்கேர்ந்து பொடி நடையில் போய்டுவேன். இந்த Mount வழி ஆட்டோக்காரருக்கும் தெரியல.


சைடில் ஒரு ஆட்டோ.. அதுக்குள்ள ஒரு மத்திய வயது பெண்மணி. சித்தியுடன் பேச்சு கொடுத்தார்கள். 

நிலைமை பார்த்து ..' ஒண்ணும் கவலைப் படாதீங்கோ..அந்த அம்பாள் ஒரு குறையும் வெக்க மாட்டா..கேட்டு திறந்திடும் ..என் பின்னாலேயே வந்துடுப்பா..நான் வழி காண்பிக்கிறேன் என்று சொன்னபடி.


சிறிது நேரத்தில் வண்டிகள் நகரும் சலசலப்பு. இன்னிக்கு திறக்கவே திறக்காது என்ற கேட் திறந்து..அந்த மாமியின் ஆட்டோ முன்னே..நாங்கள் பின்னே.

கொஞ்ச தூரம் பயணம் அவர்கள் வழிகாட்டலில். 

ஆட்டோவிலிருந்து தலையை வெளியே நீட்டி..' இதோ ஆஸ்பத்திரி அடுத்த கட்டடம் தான்.

பொண்ணு பிறந்தா மறக்காம 'ராஜேஸ்வரி' நு.பேர் வெச்சுடுங்கோ காற்றில் மிதந்த பெயர்.


thanks maami என்று தலை நீட்டி என் சித்தி சொல்ல ஒரு நொடியில் எந்த சந்தில் நுழைந்தது் அவர்கள் சென்ற ஆட்டோ புரியலை..


இதெல்லாம் சரி.. 

புண்யாஹ வாசனம் நாள்.

மாமியார் வந்தார்கள் ஊரிலிருந்து. 

அம்மா கேட்டாள் ' மாமி பேத்திக்கு என்ன பேர் வைக்கப் போறேள்.?

அவள் சொன்ன பெயர்..?

' ராஜேஸ்வரி'..!!!

( இப்போது போல ஃபோனில்லை..அம்மாவுக்கு நடந்த எந்த விஷயமும் தெரியாது..அவர்கள் பழவந்தாங்கல் போனது கூட இல்லை..

எப்படி?

இன்னும் கேள்வி என் மனசில் உண்டு?

No comments: