Sunday, July 3, 2022

Retro

 #ஸண்டே_ஸ்பெஷல்

#ரெட்ரோ..


' இந்தாங்கோ..இன்னிக்கு வந்த கடுதாசி..'..


பாட்டி தருவாள்.


கடிதத்தை  பிரித்து படித்து..தாத்தா  சொல்ல்ப் போகும் விஷயத்திற்காக ஆவலுடன் பாட்டியுடன் சேர்ந்து நாங்களும் காத்துக் கொண்டிருப்போம்.


பாட்டிக்கு படிக்கத் தெரியாது என்றெல்லாம் இல்லை... அது என்னவோ ஒரு discipline. 

"வெள்ளிக்கிழமை ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ல  விசாலம் வராளாம்...'

இந்த வாசகம் கேட்டதும் என் காதில் தேன் வந்து பாயும்..

ஏன் தெரியுமா..?..


விசாலம் வந்தா என்ன..விச்சு வந்தா என்ன?..

நமக்கு ரயில்வே ஸ்டேஷன் போகறதுக்கு ரொம்ப பிடிக்கும்..


திருச்சி ஜங்ஷனுக்கு  டாண்ணு அஞ்சு மணிக்கு முன்னாடியே ட்ரெயின் வந்துடும்..


மெளனராகம் தங்கை மாதிரி..' தாத்தா..தாத்தா..நானும் உங்க கூட ஸ்டேஷனுக்கு வரேனே'...


" காலங்காத்தால..பனியில எதுக்கு?..

பாட்டி இழுக்க..

திருச்சில என்ன பனி..அவ வரட்டும்..

தாத்தா..green signal கொடுக்க..


வீட்டுப்பாடம் எல்லாம் சூப்பரா முடிச்சு வைச்சு..

நாலு மணிக்கே எழுந்து குளிச்சு முடிச்சு..fresh aa ready ஆகி..தாத்தாவோட 🚲 சைக்கிள் பின்னாடி உட்கார்ந்து..அப்படியே ஜில்லுனு அடிக்கும் காற்றை எஞ்சாய் பண்ணி..


ஆஹா..


தாத்தா 🚲 ஸ்டாண்ட்ல வண்டியை நிறுத்திட்டு வரதுக்குள்ள..ஓடிப் போய் பிளாட்பார்ம் டிக்கட் வாங்கிண்டு வர..

" கடவுளே..கடவுளே..ஒரே ஒரு goods வண்டி வரணுமே..' 

ஒண்ணு ரெண்டு மூணுனு எண்றதில இருக்கற சுகம் இருக்குப் பாருங்க..

அன்னிக்கு ஸ்கூலில் போய் பெருமையா சொல்லிக்கலாமே..


காஃபி காஃபி..இட்லி வடை பொங்கல்..

கமகமனு மூக்கைத் துளைக்கும்.


கறந்த பாலில் ☕ பாட்டி சுடச் சுடச் காஃபி கலந்து வெச்சிருப்பா..மனசு..சமாதானம் பண்ணும்.


ஆனா..அந்த இட்லி வடை பொங்கல் வாசனை இருக்கே..

மூக்கு ..மூணு முழம் நீளும்.. ஜொள்ளு..ஜொள்ளு..ஜொள்ளோ..

ஜொள்ளு..😋😋😋😋


ம்ம்ம்ம்ம்..அதெல்லாம் எங்க..

வீட்டுக்கு போனால்.. பாட்டி பண்ணி வெச்சிருக்கும் இட்லியும் வெங்காயச் சட்னியும் ரெடியா இருக்கும்..

இருந்தாலும்.....


🏀 🍪 பிஸ்கட்  வண்டி....ஆஹா..😛😛😛


தாத்தா..கருமமே கண்ணாயினாரா..

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்..🌻ஸ்டேஷனில் காத்திருக்கேன்னு..'..

காதை தீட்டி announcement க்கு காத்திருப்பார்..


அடிக்கடி இப்படி கூப்பிட போவதால்..எந்த பெட்டி எந்த எடத்தில நிக்கும்னு எங்களுக்கு மனப்பாடம்.


அதுக்குள்ள..


"மெட்ராஸ் ஸே ஆனேவாலி ராக்ஃபோர்ர்ட் எக்ஸ்பிரஸ்..'....ஹிந்தியில் அறிவிப்பு வர..

அட்டென்ஷன் mode க்கு போய்டுவோம்.


ஒரு வழியா ட்ரெயினேலேர்ந்து பார்ட்டிகள் இறங்க ..

' நான் தூக்கறேன்..நான் தூக்கறேன்னு' ஒரே ஓவர் enthu..வில் இருப்பேன்..

ஒவ்வொரு ஊரிலேர்ந்து வருபவர்கள் பையில் ஒவ்வொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்குமே..


தாத்தா சைக்கிளில் இரண்டு பை மாட்ட..

வந்த அத்தையோ..பாட்டியோ..சித்தியோ..

ஓடிப் போய் TST பஸ்ல உட்கார்ந்துடுவோம்.


செல்லாத்தா..செல்ல மாரியாத்தா..பாட்டு ஆரம்புச்சு..

கரெக்டா நாம் எறங்கும் போது..

"வசந்த கால நதிகளிலே..வைர மணி நீரலைகள்.." கமலும் ஸ்ரீதேவி யும் கண்ணில் தெரிய..

கோர்ட் ..எறங்கு எறங்குனு..கண்டக்டர் கூவ..

மூட்டை தூக்கி வீட்டுக்கு வந்ததும்..

அந்தப் பைக்குள்ள எல்லாம் என்ன இருக்கும்னு மனசு ஆலாய்ப் பறக்கும்..


" காஃபி உறிஞ்சபடி ..எல்லாரும் வட்டமாய் உட்கார்ந்து ஊர்க் கதை கேட்போம்'..

" கிளம்பு..கிளம்பு..சாயங்காலம் பார்க்கலாம்னு..விரட்ட ..சோகமா ஸ்கூலுக்கு கிளம்புவேன்..


நமக்குதான் guide duty. மலைக்கோட்டை..ஸ்ரீரங்கம் திருவானைக்கா எல்லாம் வந்தவர்கள் கூட போகணும்..

அப்படியே..

"இங்கே சமோஸா சூப்பரா இருக்கும்னு.".சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் காண்பித்து சொல்ல..ஹி..ஹி..ஹி..😃😃😃😃


தெப்பக்குள பஜ்ஜி மாமா..' ஏன் மாமி ரெண்டு வாங்கிண்டு போங்கோளேன்" சொல்ல..💪💪💪😀😀

..

ஆஹா..ஓஹோ..ஹே..ஹே..ஹே தான்..


அந்த கொண்டாட்ட நாட்கள்..


வந்த பார்ட்டி வேற வழியில்லாமல் வீட்ட்ல இருக்கும் டிக்கட் எண்ணிக்கை கேட்டு..

பொட்டலம் அங்கே கட்டப்பட..


வீட்ல ..பாட்டி சமையல் கெஸ்ட்டுக்கு..😃😃

பார்ட்டி தந்த சொந்தத்தை வாழ்த்தி..நாங்க சிந்து பாடுவோம்ல..


அவங்க கிளம்பும் நாள் வரும்..


வீட்ல இருக்கற எல்லாரும் ஆளுக்கொரு மூட்டை எடுத்து..இப்ப்போ மாவடு மாகாளினு ,நார்த்தங்காய்னு பைகள் ரொம்பி..

ஏலேலோ ஐலஸா பாடி பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டு..

அப்படியே ஸ்டேஷனுக்கும் போய்..

கட்டை சீட்ல உட்கார்த்து வைத்து..😭 கண்ணீர் மல்க..விடை கொடுத்து..ட்ரெயின் கண் மறையும் வரை கைகாட்டி, கார்டுக்கும் டாடா காட்டிவிட்டு 

வீட்டுக்கு வர..


வீடே வெறிச்சுனு போய்டும்.அடுத்து வரும் லெட்டர்..அடுத்து வரப் போகும் ஆள் யாருனு..ஆவலாய்க் காத்திருப்போம்..


ஊரிலேர்ந்து வருபவர்கள் மட்டுமல்ல...பக்கத்து ஸ்டாப்பில் வீடு இருக்கும் சித்தி வந்தாலுமே..பஸ் ஸ்டாண்டுக்கு ஓடிப் போய் கூட்டிக் கொண்டு வர நிற்பது....


இரு இரு அடுத்த பஸ்ல போலாம்னு ..பஸ்

ஸ்டாப்பில் நின்று..விட்டுப் போன கதை பேசி..


இப்போ எல்லாம் இதெல்லாம் சாத்தியமா?..

' ஊருக்கு வரேன்னு'வாட்ஸப்பில் மெசேஜ் வர..கூகுள் மேப்பில் வழியை அனுப்பி விட்டு நம்ம வேலையைப் பார்க்க போய் விடுகிறோம்.


' வெளியே போகணுமா..ஓலா ஊபர் app  இருக்குல்ல..அதுதான் செளகரியம்.'..என்று நழுவி விடுகிறோம்..


வட்டமா உட்கார்ந்து..அப்ப்டியே ஒரு நாலு வேர்க்கடலையை மென்று கொண்டு..வந்தவர்கள் பேசறதை...ஆசையாகக் கேட்ட காலம் இனி வருமா?


 நொடிக்கொரு தகவல் பரிமாற்றம் இருப்பதால்..

யாராவது வந்தால் கூட..அதான் தெரியுமே..நீ போன இடம் பேசின பேச்சுனு...உன் status ல பார்த்துட்டேன்..bye ..சொல்லி கிளம்பிடறோமே....


என்னமோ போங்க..

வரவேற்பும் இல்லை..வழி அனுப்புதலும் இல்லை..

அவங்கவங்க வேலையைப் பார்த்துக் கொண்டு..


ஆனால்..எனக்கு இன்னிக்கும் ரொம்ப பிடிச்ச விஷயம்..ஸ்டேஷனோ பஸ் ஸ்டாப்ப்போ..போய் நின்னு கூட்டிக் கொண்டு வருவது..

டாடா காட்ட போறது ....😃😃😃

..


ரெட்ரோ..

No comments: