Friday, June 10, 2022

சும்மா இருக்காதே மனசு

 #மத்யமர்_கவிதைப்போட்டி

#பதிவு 2

#எடுத்துக்கொண்ட_வரி

#சும்மா_இருக்காதே_மனசு.


உரையாடல்கள் உறங்கிப் போன இந்நாளில்.. இந்த ஐயா,அம்மணியின் கவிதை நடை படியுங்களேன்.


நான் கொடுத்த தலைப்பு

#சொல்லத்_துடிக்குது_மனசு


#அம்மணி: 

கூடப்பிறந்தவன் கலியாணம்

கூப்பிடாமலே போகோணும்

கூடத்தான் வாருமையா..

கூடுமே மருவாதை யுந்தான்..

 

#ஐயா:

களத்து மேட்டு வேலையுமே

கழுத்து வரை இருக்குதிங்கே

கை கொடுக்க யாருமில்ல..

கண்ணே..நீ கிளம்பிடம்மா 


#அம்மணி:

நானில்லா அந்நேரம்

நாவையுமே அடக்கிடோணும்

நாலும்  திண்னு போட்டிங்கே

நோயில  விழுந்திடாதீரும்..


#ஐயா:

ஐயங் கொள்ளாதே பெண்ணே

ஐயர் மெஸ்ஸும் இருக்குதிங்கே

ஆவியில் வெந்த இட்டிலியுடன்

அடங்கிக் கிடப்பேனிங்கே 


#அம்மணி;

சக்கரையும் ஏறிடுமே

அக்கரையில் சொன்னேனே..

செவி சாய்க்க மாட்டீரென்று

சத்தியமாய் புரிந்தாலும்

#சும்மா_இருக்காதே_மனசு

சும்மா இருக்காதே..


#ஐயா:

ஒப்பாரி வைக்காதடி..

உன் பேச்சை தட்டேனடி

ஒழுங்கா இருப்பேனடி

ஒவ்வாததை உண்ணேனடி..


#அம்மணி;

கிளப்புறதே குறியாய் போச்சே

கும்மாள மடிக்க திட்டமுண்டோ

கிடந்த டிக்குதே என் மனசு

கிழவனையும் விட்டுப் போக..


ஐயாவின் மனசுக்குள்

ஆயிரம் யோசனையும்..


பற்றி வந்தாலே..எனைச்

சுற்றியே வருவாயே 

சுற்றம் மறப்பாயே..

பழித்துச் சிரிப்பாரே..


சண்டிராணி இல்லாது

சலிப்பூட்டு மென்றாலும்

#சும்மா_இருக்காதே_மனசு..

சுத்தி வருமே உன் நினைவு 


தேன்சொட்டும் சொல்லில்லை

செயலிலே அன்பிருந்தால்..

சன்மமிங்கே வாழ்ந்திடலாம்..வரும்

 சந்ததிக்கு சொல்லிடுவேன்..ஆதர்ச

 தம்பதியும் ..நாமென்று .

No comments: