Sunday, January 5, 2020

வடை மாலை

வடா..வடா..ஆஞ்சு வடா..

'ஹனுமான்ஜி கோ "வடா மாலா' லகானேக்கா ப்ரார்த்தனா ஹை..ஆப் கரேங்கே க்யா' கேட்ட என்னைப் பார்த்து " "ஙேனு' முழித்தபடி அந்த டேஹ்ராடூன் கோயில் panditji ..' Abhi hojayega beti' என்றார்.

"தீயா வேலை செய்வாரோனு' நான் காத்திருக்க..அஞ்சே நிமிஷத்தில் ஆஞ்சுக்கு ஒரு " bada mala' உடன் ஆஜரானார்.

"Vasanthi " யை ' basanthi' என்று சொல்பவர்களாச்சே..
நான் சொன்ன "vada mala' அவருக்கு bada  mala வாக புரிய..
ஆஞ்சுக்கு ஆளுயர ஆரஞ்சு மஞ்சள் பூக்களில் "ப"டா மாலை..
இன்னிக்கு ஆஞ்சுக்கு இதுதான் வேணும்  போல இருக்கு என்கிட்டேர்ந்துனு மனசுக்குள் சந்தோஷம்.

' நாம ஏன் வீட்லயே செய்யக்கூடாதுனு
ட்ரை பண்ண ஆரம்பிச்சேன்

ஒரு தடவை ஒரே ரப்பர் மாதிரி இருக்கும்.
இன்னொரு முறை..எண்ணெய் குடித்து தள்ளாடும்..
சில சமயம் சுத்தியலால் அடிச்சு சாப்பிடற மாதிரி இருக்கும்.

இந்த 'வடா' வுடன் 'விடா' முயற்சி..
இப்போ வெற்றி ..வெற்றி தான்.

ஒவ்வொரு வடை தட்டும்போதும்..ராம நாமம் சொல்ல..

மாலையாக கோர்த்த வடை..மலை போல் வரும் துயரும் போக்குமென்றெ..
மாருதியை..சஞ்சீவினி மலை ஏந்தியவனைத் தொழ..
மனசு பாரமெல்லாம் பனியாய் விலகிடுமே..

லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து..
ஓம் ஷாந்தி..ஷாந்தி..ஷாந்தி..

இன்னிக்கு கோட்டா ஓவர் .

Now over to
Sumathi Manivannan V.n. Meenakshi

No comments: