Thursday, December 5, 2019

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

சந்திப்போமா..இன்று சந்திப்போமா..

அங்கங்கே தலை காட்டிய வெள்ளிக் கம்பிகளுக்கு 'டை ' அடிச்சாச்சு.. எந்த புடவை பாந்தமா இருக்கும்..தேடலுக்கு பின் தேர்ந்தெடுப்பு ஒரு சிவப்பு கறுப்பு புடவை..
ஃபோட்டோவில் இருப்பது போல இருக்கணுமே ..ஒரு கவலை..சின்ன விபூதிக் கீற்று பயம் போக்க இட்டாச்சு..வாட்ச் வடிவில் அம்மாவையும் கூட கூட்டிண்டாச்சு.
என்ன வாங்கிண்டு போகலாம்..?.பழமா..பலகாரமா..
வென்றது பழம்..பொறுக்கி எடுத்து வாங்கியாச்சு..புஸ்தகம் நிறைய படிப்பார்னு கேள்விப் பட்டிருக்கோமே..சரி ..புக் ஹவுஸில் ஒரு மேய் மேய்ந்து மனசுக்கு ஓகேனு சொன்ன ஒரு எழுத்தாளர் படைப்பை pack செய்தாச்சு..
எதில் ஆரம்பிக்கலாம்  பேச்சை...? இதுவரையில் எழுத்தில் தானே அறிமுகம்...
இந்த சந்திப்பு ஒரு மிக சந்தோஷமான ஒன்றாக இருக்கணுமே...ஆட்டோ பிடித்த வேளை..லேசாக ஒரு excitement. அபார்ட்மென்ட் வாசல் இறங்கியதும் பேரும் ஃபோட்டோவும் பிடித்த  செக்யூரிட்டி 'உள்ளே காத்திருக்கிறார்கள்' வழி சொன்னான். பிள்ளையார் சிலை ஒன்று போய் வா உள்ளே என்றது..வழியெங்கும் வண்ணப் பூக்கள்..சிவப்பாய் ஒரு மைக் பூ ஒன்று தலையாட்டி வரவேற்க..துறு துறு கைகள் காமிராவில் படம் பிடிக்க..அங்கே அழகான குழலூதும் கண்ணன் முன்  கானமிசைத்தபடி அங்கிருந்த வயதில் மூத்தோர்..
மணிகளும் தோரணமும் தொங்கும் வாசல் முன் நிற்க..படபட மனசை அடக்க..மணிச் சத்தம் கேட்டு வந்து திறந்தாள் ..பதிவுகள் மூலம் பரிச்சயமான saraswathi..நம்ம் Mythili Varadarajan  aunty ந் வலது கரம்.

எங்கே வந்தேன்னு புரிஞ்சதா..great meeting with such a wonderful fb friend Mythili Varadarajan aunty.

'உன்னை first time பார்க்கிற மாதிரியே இல்லையே.'.அவர் உதிர்த்த முதல் வாசகம்..சந்தோஷம் சந்தோஷம்.அப்பப்பா...
பேச்சு..பேச்சு..பேச்சு..
அடக்க முடியாமல் ஃபோட்டோ எடுக்கும் போது சிரித்துத் தள்ளும் Mythili aunty. கன்னடத்தில் செல்லமாய் கண்டித்த சரஸ்வதி..
அவரது அக்கா சரயூ aunty வீடு..
வீடல்ல..அது ஒரு அழகான art gallery.. ஒரு கோயில் போல..எல்லா ஊர்களையும் ஒரே இடத்தில் சுற்றி வந்த பிரமிப்பு..
பசுமையான செடிகள் தொட்டிகளிலும்.. தொங்கிக் கொண்டும்..
ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம்.

நேரம் போனதே தெரியவில்லை..
மீண்டும் வந்து meet பண்றேன்..வாக்கு கொடுத்தபடி மனசில்லாமல் நான் கிளம்ப..
வீட்டில் கொடியிலிருந்து வெத்தலை பறித்து தாம்பூலம் கொடுத்து மிக அன்பாய் வழியனுப்பிய அவர் அக்கா.. (அந்த வெத்தலை மென்ற சுகம்..இன்னும் நாக்கில்)
வாசலை அடைவதற்கு முன் ..Facebook status போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட...ஒரு அருமையான நட்பை..
.என்ன தவம் செய்தனை..இத்தனை அன்பும் ஆசையும் கிடைக்கச் செய்த மார்க்குக்கு ஒரு சலாம் ..
FB உங்களைப் பொறுத்த வரை என்ன என்று பதிவில் கேட்டிருந்த Shankar Rajarathnam sir..
பதிவுகளும்..அதைத் தொடரும் unconditional அன்பு காட்டும் இந்த பந்தங்கள் தான் என் பதில்.

No comments: