Thursday, November 1, 2018

தாயத்து

கோயிலில் கண்ட காட்சி..

காத்து கருப்பு பட்டதோ
கருத்தோடு கட்டினாள்
கையில் தாயத்து..
காதல் நோயது ..தன்வீட்டு
காளைக்கு வந்ததறியா
கவலையில் தாய்.

மந்திரத் தாயத்து
மாற்றணுமே மகனிவனை
மருமக வரணுமே..எல்லார்
மனசையும் கவரும்படி..

வேடிக்கை மனிதரென
வேங்கடனும் நினைப்பானோ..
வேடிக்கை விட்டு..என்
வேண்டுதலை தொடர்ந்தேனே

No comments: