Sunday, October 28, 2018

புல்லு..மண்ணு..கீரைக்கட்டு

புல்லு..மண்ணு..கீரைக்கட்டு

கீரை ...பச்சை பசேல்னு பார்த்ததும் நாக்கில் ஜலம் ஊறும். கொஞ்சம் பருப்பும் தேங்காயும் போட்டு கடைந்து உண்டால் தேவலோக சுகம்..
'அக்கா ..ரெண்டு கட்டு எடுத்துக்கோ' என்றாள் என் ஆஸ்தான காய்க்காரம்மா.
கட்டைப் பிரிக்கும் முன் தேடி எடுத்தேந் என் க்ளவுஸ்..அத்தனை மண்ணு.. குடலைப் பெரட்டி எடுக்க..
வாட்ஸப்பில் வந்த வயிற்றை கலக்கும் வீடியோவும் நினைவுக்கு வர ..சர்ப்பம் எதுவும் சயனத்தில் இருக்குமோங்கற பயத்தில் .பக்தியோட கட்டைப் பிரிச்சேன்..அப்பாடா..அப்படி எதுவும் இல்ல..
 மண்ணும் புல்லும் ஃபுல்லா இருக்க..
ஆராய்ச்சி பண்ணி ஆய்ந்து வெச்சாச்சு..
இப்போ அடுத்தது அலம்பி எடுக்ணும்..
அள்ள..அள்ள குறையா..மண்ணு..
அரை டாங்க் தண்ணி  காலி. நெத்தி வேர்வை நிலத்தில் விழ..சுத்தம் பண்ணியாச்சு..
ரெண்டு கட்டு கீரை..ரெண்டு கரண்டியாச்சு வெந்ததும்...
அப்போதான்..மனசு இறக்கை கட்டி சீரங்கத்தை நோக்கி பறந்தது..
சித்திரை வீதியில் வித்தாலும..்வீட்டு வாசலில் வந்து வித்தாலும்..
கீரை கடையும் மணம்..கிறங்க வெக்குமே எப்பொதும்..
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..
அதெல்லாம் திரும்பியே வராதா..நல்ல் சுத்தமான  காயெல்லாம் சமைக்க..சாப்பிட காலம் மறுபடியும் வராதா..ஏக்கத்துடன் அகிலா..
சரி..சரி..ஓவரா செண்டி போடாத..மைண்ட் வாய்ஸ் சொல்லி..போன வருஷம் போட்ட பாட்டை மார்க்கு ஞாபகப் படுத்த..
விரைகிறேன்..ஒரு வெட்டு வெட்ட

கீரை ஆய்தல்

கடைந்த பாற்கடலில்..
கிளம்பி வெளியேறியது...
ஆலகால விஷமென்றால்..
கடையும்..
கீரை எம்மாத்திரம்..
பழுதும்..பழுப்பும்..
படியும் அழுக்கும்..
பாங்காய் விலக்கி..
பருப்போடு கடைந்து..
A விட்டமின் சத்தோடு
அன்புமும் கூட சேர்த்து..
மசித்த கீரை..
மயக்க வைக்காதெனினும்
மறுபடி கேட்க வைக்குமே.

No comments: