Wednesday, October 10, 2018

சக்தி

ஏதாவது ஒரு விஷயம் நிச்சயம் அம்மாவை ஞாபகப்படுத்தி விடும்.
இன்றும் அதேபோல.. போன வருடம் எழுதிய பதிவு..
நினைவலைகள் தொடரும்..

அரசுப் பணி வேலை..என்
அம்மா ஞாபகம் வரவைத்தது..
SSLC தேர்வில் ..
மாவட்ட முதலவள்..
தலைமை ஆசியிரியை.
தாராளமாக சொன்னார்..
மருத்துவ படிப்புக்கு..
மானியம் நான் தரேன்னு..
குடும்ப நிலமை..
கூறாமல் புரிய..
அரசு வேலை..
அவள் பருவம் பதினாறில்
குட்டிப் பெண்ணவளுக்கு.
எட்டா மேசை..
உயரமாய் நாற்காலி..
சிறிய வேலையில் சேர்ந்து
பெரிய பதவி வரை.
அம்மா..ஒரு all rounder
உள்ளத்தில் உறுதியோடு..
ஊறுகள் வந்த போதும்..
உறுதியாய் நின்று..
உடன் பிறந்தோருக்கு
புது உலகம் அமைத்தவள்..
என்னைப் பொறுத்தவரை..
இவளும் ...
 சக்தியின் வடிவந்தான்..
இவள் போல்..
பல சக்திகள் இங்குண்டு
வெளியே வராத..
வெளிச்சம் போட்டு காட்டப்படா..
எத்தனையோ..
சாதனையாளிகள்..

No comments: