Tuesday, May 8, 2018

little extras ..but not extremes.(மத்யமர்)

little extras ..but not extremes..

ஒரு கஷ்டம் வரது..இல்ல கஷ்ட்டமே வந்தபடி இருக்கு. அது வேலை சம்மந்தமானதாக இருக்கலாம். பணம் சம்மந்தப்பட்டதாக இருக்கலாம். உறவு that is relationship சம்மந்தப்பட்டதாக இருக்கலாம். எல்லாத்துக்கும் மேலே உடல்நலத்தோட தொடர்புடையதாக இருக்கலாம்.

இந்த நாலு வகைக்குள் எதோ ஒரு வட்டத்தில் சிக்கி மீண்டு வரும்போது அடுத்த வட்டம் ,வா..நான் உனக்காகத்தான் காத்திருக்கிறேன்னு மாலையோட மேள தாளத்தோடு காத்திருக்கு.தப்பிக்க முடியாது..தலை நிமிர்ந்து எதிர்கொள்ளணும்னு ஒரு திடம் கொஞ்ச கொஞ்சமா கரைந்து எதைத் தின்னா பித்தம் தெளியும்னு ஒரு நிலைக்கு தள்ளப் படுகிறோம்.

இப்படி வரிசை கட்டி வருத்தங்கள் வரும்போது உடனே என்ன தோணும்?

எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம்.
இதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்கறோம்.

'பரிகாரம் செய்' ..
எல்லாம் சரியாய்ப் போய்டும்னு நிறைய நமக்கு சொல்வதைக் கேட்டு..யார் என்ன சொன்னாலும் போய் செய்து..அது சில சமயம் பலிக்கும்..சில சமயம் அடுத்த சுற்றுக்கும் இழுத்துச் செல்ல..நம் வாழ்வின் focus மாறிப்போய் விடும் நிலைமை.

சில சமயம் எனக்குத் தோன்றும்..
இந்தக் கஷ்டமெல்லாம் கடல் அலையாய் வருவதே நாம் எவ்வளவு பலம்/பலமீனமானவர் என்பதை சோதிக்க த்தானோ..

for example..ஒரு இலையில் எல்லாமே இனிப்பாக பரிமாற ப் பட்டால் நம்மால் சாப்பிட முடிகிறதா..கொஞ்சம் உப்பு காரம் தேடுகிறோம். வாழ்க்கையும் அப்படித்தானே?

ஒரு சின்ன சந்திப்பை இங்கே ஷேர் செய்ய விரும்புகிறேன்.

நேற்று நான் ஒரு குருவின் மடத்திற்கு சென்றேன். அங்கே ஒரு நடுத்தர வயதுக்காரர் பம்பரம் போல வேலை செய்து அத்தனையும் தன் கண்காணிப்பில் ஒன்று கூட தப்பாகி விடக்கூடாதே என்று அப்படி ஒரு dedicated வேலை செய்து கொண்டிருந்தார் . என்னைப் போல போனோமா..பூஜை பார்த்தோமா.. சாப்பிட்டு வந்தோமா என்றில்லை அவரோட போக்கு.

பேச்சு கொடுத்த போது தெரிய வந்தது ஒரு அதிர்ச்சித் தகவல்.
அவருக்கு ஏழரை நாட்டுச் சனியாம்.எதைத் தொட்டாலும் செய்தாலும் கஷ்டம்.கஷ்டம் ..கஷ்ட்டமே..

பரிகாரம் ஏதாவது உண்டானு அவர் தேடி அலைந்தபோது..அவரின் ஆன்மீக குருவின் கட்டளைப் படி ஏழரை ஆண்டு குடும்பத்தை விட்டு ,ஏதாவது ஒரு முற்றும் துறந்தவருக்கு பணிவிடை செய்தால் பாவமெல்லாம் பறந்தோடிடும் என்று சொல்ல..பரிவாரத்தை விட்டு விட்டு பரிகாரம்.செய்தபடி அவர் அங்கே..

இவர் குடும்பம்?
பிள்ளைகள் இப்போ வேலையில் இருக்கிறார்களாம். அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் என் அறிந்தேன்.
இருந்தாலும் ..இது சரியா

 குடும்பத்தலைவன்  கண்காணாமல் தன் கடமை விட்டு , துறவியுடன் இருக்க..
என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டு அவர்கள் குடும்பம் வாழ்ந்தாலும் எப்போதும் ஒரு restless ஆகத்தானே வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.

சம்பாதிக்கும் பிள்ளைகள்..என்ன கவலை என்று வாதிடலாம்..
இதுதான் நல்லதுனு சொல்லும்போது ..செய்யாமல் இருந்தால் இன்னும் கஷ்டம் வந்து விடுமோனு பயமும் இருக்கலாம்.

ஏழரை வருஷம்தானே ஏழு நிமிஷம் மாதிரி ஓடிடும்னு மனதை திடப் படுத்திக் கொண்டாலும்..ஏழரை வருஷத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பொறுப்புகள் எல்லாம் எங்கே போகும்?

விட்டு வந்த வேலையோ/ சொந்தத் தொழிலோ..தலை தூக்க முடியுமா..இரு நான் போய் பரிகாரம் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும்போது?

தெய்வ பக்தி,பரிகாரம் எல்லாம் தேவைதான்.

ஆனால் 
why me..என்று புலம்பினாலும்..

try me என்று அடிக்கடி குஸ்திக்கு ரெடி ஆகி இன்னும் கொஞ்சம் extra உழைப்பு, extra care ,extra தைரியம், extra நம்பிக்கை அதுவும் தன்னம்பிக்கை..
எடுத்து extreme step க்கு போகாமல் எதிர்நீச்சல் போட்டு வாழப் பழகணும் இல்லையா...

அப்போது தான் திரும்பிப் பார்க்கும்போது நாம்  எப்படிக் கடந்தோம் இத்தனை கல்லும் முள்ளும் நிறைந்த கடினப் பாதை ...என்றும் ஒரு நிறைவும் சந்தோஷமும் தரும் தருணங்கள் அலாதிதானே?

mission of life..making every struggle a milestone..அதுதானே friends?

வேறென்ன விட்டுப் போகணும் நம்ம குழந்தைகளுக்கு காய(ல)த்தினால் கிடைத்த வலிமையா? வலியா?

No comments: