Tuesday, May 15, 2018

Happy mothers day

happy mother's day maa..

பிறந்தநாள் உனக்கு
பாயசம் வெச்சியா என்றால்
பழக்கமே இல்லை என்பாள்.
எப்போது பேசினாலும்
எடுத்தவுடன் கேட்பாள்
சாப்பிட்டியா நீயென்பாள்
சாம்பார் பொடி இருக்கா
ரசப் பொடி காலியாயிருக்குமே
எங்கோ இருந்தபடி
எடை போடுவாள் எல்லாம்
குரல் வைத்தே கண்டுபிடிப்பாள்
கோபமா..குதூகலமா என்றே
அப்பறம் பேசறேன் என்பேன்
எப்போவுமே நீ இப்படி என்பாள்
உற்றார் உறவினர் கதையெல்லாம்
ஒன்று விடாமல் சொல்வாள்
பேத்திகளுக்கு பிடித்ததெல்லாம்
அத்துப்படி அவளுக்கென்றும்
பார்த்து பார்த்து செய்வதில்
பரம சந்தோஷம் அடைவாள்
அன்னையர் தினமெல்லாம்..
அவளும் கொண்டாடியதில்லை..
எடுத்துச் சொன்னாலும்
எதுக்கிந்த ஆரவாரமென்பாள்..
சண்டை பல பொழுது
சலிக்காமல் நடந்தாலும்
சமாதானக் கொடி பிடித்து
சரி சரி விடென்பாள்.
என்னை விட்டு நீ சென்றாலும்
எங்கம்மா இப்படித்தான் பண்ணுவானு
என்னை நான் நிலை நாட்டிக்க
அடிக்கடி வரும் உன் நினைவு
அன்னையர் தினத்தில்
மட்டும் தானா என்ன..?

No comments: