Monday, June 18, 2018

Airport

airport...

வானூர்தி நிலையம்..
வழக்கமான ...
வழி அனுப்புதலும்..
வரவேற்புகளும்..

விடை கொடுக்க மனமின்றி..
விம்மும் நெஞ்சங்கள்..
'பத்திரமா போய் வா' க்கள்..
நினைவுகளை படம்பிடித்து
miss you என்ற
status update கள்..

கண்ணில் வழியும் நீரை..
யாரும் காணாமல் துடைக்கும்..
நட்பும்..
கைகாட்டி வழி அனுப்பி..
கண் எட்டும் வரை..
எம்பி எம்பி பார்த்து
எட்டாத் தூரம் செல்லும்வரை..
விட்டுச் செல்ல மனமில்லாத
பிணைப்புகள்..

வருவோரை வரவேற்க..
வருமே ஒரு கூட்டம்..

சொர்க்க வாசல் திறப்பு போல..
அர்த்த ராவிலும்..
அசராது காத்திருக்கும்..
அன்புள்ளங்கள்..

தள்ள முடியா trolley யுடன்..
தன் சொந்தங்களைத் தேடும் கண்கள்..
ஆனந்த கண்ணீரோடு..
அள்ளிக் கொண்டாட
ஆசையாய் ஓடிச் செல்லும்
அம்மா ..அப்பாக்கள்..

பத்து வயது குறைந்திடும்..
பேரக் குழந்தைகளைப் கண்டதும்..
துள்ளியோடிய தாத்தா பாட்டிகள்..
பிஞ்சுக் கை பிடித்து...அது
கொஞ்சும் மொழி கேட்டு..
தனை மறக்குந் தருணங்கள்..

பன்மொழியில்..
பாச வரிகள்..
வீசிய..பாச வலைகள்..

கணிணிப் பையுடன்.
காலை மாலை மறந்து..
களைப்புக் கண்ணோடு..
கார் டிரைவரைத் தேடும்..
கடமைக் கண்ணாயிரங்கள்...

அடைப்பே பாராத கடைகள்
காபி டீ முதல்..
continental வரை..
காசு மட்டுமே பேசுமிடம். .

சிரத்தையாய் கூட்டிப் பெருக்கி..
மீண்டும் தூக்கத்தை தொடரும்..
துப்புரவுப் பணியாளர்கள்..
அவர்களின் வேலைப் பளுவைக் குறைத்த..
swachh bharath abhiyan..

 மிடுக்காய் உடையணிந்து..
மலர்ந்த முகத்தோடு..
இரவையும் பகலாக்கும்..
புன்னகை குத்தகையெடுத்த
புதுயுக சுறுசுறு இளைஞர்கள்..

மகள் வரவுக்காக..
காத்திருந்த மூன்று மணி நேரம்..
பாலு மகேந்திரா இயக்கத்தில்..
ராஜாவின் பின்னனியில்..
மனிதர்கள்..
மனங்கள்..எல்லாம் கலந்த..
airport..ஒரு
art film போல..
எண்ணத்தை விட்டகல மறுக்கிறது..

முன்ன மாதிரி இப்போ..
யாரும் இல்லனு..
புலம்புவர்களுக்கு...
இந்த விமான நிலையக் காட்சி..
ஒரு எதிர் தரப்பு சாட்சி...

No comments: