Sunday, April 8, 2018

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன்.

அட்மிஷன் வாங்கலையோ அட்மிஷன்.
நவம்பரிலிருந்து ஆரம்பிச்சு ஏப்ரல் வரை நடக்கும் மேளா..இந்த அட்மிஷன் மேளா.
transfer ஆனவர்கள், பழைய ஸ்கூலிலிருந்து வேறு பள்ளிக்கு மாற விரும்புபவர்கள்..இப்படி பல வகை.
க்யூவில் நிற்கும் காலம் போய் இப்போது எல்லாம் கணினி மயமாயாச்சு.
ஒரு சில பள்ளிகள் மட்டும் கால் கடுக்க நிக்க வெச்சு அப்ளிகேஷன் தருகிறார்கள்.
என் பெண்களுக்காக 1995 லிருந்து பார்த்த பள்ளிகள் ஏராளம்..ஆனால் மாறாத சில விதிகள் மன உளைச்சலை தருகிறது.
LKG admission ..lottery system ல செலெக்ட் ஆனவர்  பெயர் வரும். அதற்கு பிறகு parents interview. அபியும் நானும் ப்ரகாஷ் ராஜும் ஐஷ்வர்யாக்கள் ஆவார்கள் அப்பா அம்மாக்கள். இது ஒரு லெவல்.
ஒரே பள்ளியில் பதிவு செய்து விட்டோம்னு சும்மா இருக்கமுடியாது. சுத்துப் பட்டு பதினெட்டு கிராமத்திலும் இருக்குற பள்ளிக்கு காசோலையுடன் பதிவு செய்யணும்.
பெரிய வகுப்புகளில் சேர்க்கணும் எனில் இன்னும் பல இடர்கள்.
தனித்தனி நாட்களில் பரீட்சை.
வேறு வேறு syllabus.
அதுவும் இந்த நுழைவுப் பரீட்சைகள் பள்ளி இறுதிப் பரீட்சை நேரத்தில் மோதுகிறது.
குழந்தைகள் எதைப் படிக்கும்?
for example - 10 ம் வகுப்பு model exam ம் practicals ம் நடக்கும் நேரத்தில் 11 th க்கான நுழைவு த் தேர்வு நடைபெறுகிறது. ஒரு பள்ளி அறிவியல், கணக்கு மற்றும் ஆங்கிலம். இதில் 9 th portion ம் அடங்கும். 10 ஆம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு 9/ம் கிளாஸ் பாடம் தெரியாதா என்று கேட்போம்..ஆனால் அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு பெரும் pressure ஆக இருக்கிறது. மாணவர்களின் 3 அல்லது 4 வருடத்திய ரிப்போர்ட் கார்டு வைத்து பரிசீலனை செய்து இது போன்ற 10 ம் வகுப்பு மாணவ/மாணவியருக்கு நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கலாமே..
அடுத்தது முக்கியமாக result.
ஒரு பள்ளி .உடனே ரிசல்ட் வெளியிட்டு குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கட்டச் சொல்லி வற்புறுத்துகிறது.
சில பள்ளிகளில் முடிவு காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் கிடைத்தை முதலில் பற்றிக் கொள்வோம்னு இதுக்கும் பணம் கட்டி, பிடித்த/காத்திருந்த பள்ளி முடிவு அறிவிக்கப்பட்டதும..் முன் கட்டிய பள்ளியில் பணத்தை forgo செய்ய வேண்டிய நிலை.
ஏன் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருக்கும் பள்ளிகளின் தலைமைகள் ஒரு unanimous decision எடுத்து , publication of results and payment of fees ல் ஒரு regulation கொண்டு வரக்கூடாது?
it gives a fair chance to the parents and children to choose the school they wish to study also இல்லையா?.
காலம் மாறும்..நம்பிக்கையில் இன்றும்

No comments: