Sunday, April 8, 2018

Boon or bane this phone ( மத்யமர்)

ஒரே கூட்டம் கோவிலில். சுவாமிக்கு அருமையான அலங்காரம் .ஆராதனை.
இரண்டு பக்கமும் முட்டித் தள்ளியபடி எல்லாரும். ரோடு வரைக்கும் லைன்.
நம்ம ஒசரத்துக்கு ஒண்ணுமே தெரியல.
எட்டிப் பாக்கறேன்..இடுக்கில் தெரியுமானு பார்க்கிறேன்..
சுத்தம். பிள்ளையாரே..எப்புடிப் பா உங்களைப் பார்க்கிறதுனு கேட்க..
எனக்கு முன்னால் உயரமா இருந்தவர்
தன் செல்லை உயரத்தில் பிடித்து வீடியோ எடுத்தபடி இருக்க.. சாமியை க்ளோஸப்பில் பார்த்தபடி நின்ற சிலர் ..' எங்க வந்தாலும் ஒரு வீடியோவா..இந்த செல்ஃபோன் வந்ததுலேர்ந்து ஒரு விவஸ்தையே இல்லாமல் போச்சு என்றபடி..அர்ச்சனையும்.ஆரத்தியும் அருகில் நின்றும் பார்க்காமல்..புலம்பிக் கொண்டிருக்க..
இவர் எடுத்தபடி இருந்த வீடியோ வழியே..வலம்புரி வினாயகர் வரம் எங்களைப் போல பலருக்கு அருள் பாலித்தபடி..technology is so improved நு சிரிச்சபடி வெண்ணெய் அலங்காரத்தில்..
(points to be noted..இந்தக் கோயிலில் வீடியோ ஃபோட்டோ எடுப்பது தடையில்லை.
another thing we always presume .. எந்த ஃபோட்டோ வீடியோ எடுத்தாலும் அது Instagram post க்கோ..fb status update மீறி..வீட்டில் உள்ள பெரியவருக்கோ..வர இயலாதவருக்கோ காண்பிக்கவோ இருக்கலாம்.
நல்லதே நினைப்போம்..நல்லதே செய்வோம்.
அன்புடன்
அகிலானந்தமயி.
happy ugadi wishes to all my friends here

No comments: