Monday, September 10, 2018

அம்மா நினைவு

10 th September.

கவனிப்பார் யாருமில்லையென
கலங்காத என் வீட்டு செடிகள்.

வறண்ட நாட்களும்
வர்தா புயலும்
வந்தும் தான் போயின.
வாடிப் போனாலும்
வாரி அடித்து சென்றாலும்.
மீண்டு(ம்) எழுந்தது
மருந்தான மணத்தக்காளியும்..
மணம்  தரும் கருவேப்பிலையும்.

அம்மா..இட்ட உரம்..
மரஞ்செடிக்கு மட்டுமல்ல..என்
மனதுக்கும் கூடத்தான்..
miss u maa

No comments: