Friday, March 22, 2019

அழகி..நீ பேரழகி

@myclick
அழகி..நீ..பேரழகி..

மஞ்சள் அழகி நீ
மலர்ந்த பூவழகி
தெளித்த சிவப்பழகில்
மிளிரும் மென்மை  நீ..

கண்ணாடியில் காட்டட்டுமா
கவரும் உன்னழகை..தலைக்
கனம் வந்திடாதே
மண்ணில் அழகி நானென்று..

காக்கும் கண்ணிமை..நம்
கண்ணுக்குப் புலப்படுவதில்லை
காக்கும் இறைவனும்..
கண்ணெதிரே வருவதில்லை..
உன்னழகும் என்றுமே..
உனக்குத் தெரிவதில்லை
ஊரார் உரைக்கையிலே
உனக்கிங்கே உறைத்திடுமோ

நாடகமாம் இவ்வுலகில்
நாள்கணக்கு உனக்கு..
நாளும் இருக்கென்ற
நம்பிக்கை வாழ்வெனக்கு..

நானும் இங்கு செய்யணும்..
நல்லது நாலு பேருக்கு..
நாதனவன் பாதமதை..
நானும் அடையுமுன்னே

No comments: