Wednesday, November 26, 2008

மேகமே.. மேகமே..

வெண்ணிற மேகமே..
கண்ணீரும் ஏன் தானோ????
காற்றது கலைப்பதனால்
கலங்காதே நீயுந்தான்..

ஓடியே திரிந்தாலும்
ஓர்சக்தி உனக்குண்டு..
ஓளிபரப்பும் கதிரவனை
ஒளியவே வைக்கவுந்தான்..

வாழ்க்கை பாடமதுவே.
வலிமையது உண்டுனக்கு
உணர்ந்திடு உன் திறனை
உலகமது உன்கையிலே..

1 comment:

Thangamani said...

அன்பு அகிலா!
தன்னம்பிக்கை ஊட்டும் அழகான கவிதை!
தொடர்ந்து கவியூற்றுப் பொங்கட்டும்!

அன்புடன்,
தங்கமணி.