Friday, December 5, 2008

விடியலைத் தேடி..

இரவெனும் நாடகம்
இருளிலே அரங்கேறும்
திரைகிழிக்கும் கதிரவனே..
மறைபோற்றும் பகலவனே..

கூப்பிடும் சேவல்
குரல்கேட்டு வந்தாயா?
பறவையதன் கானம்தான்
உறக்கமதை கலைத்திட்டதா....?????
பூக்களின் வாசந்தான்
தாக்கித்தான் விழித்தாயா?????

சந்தேகம் எனக்குண்டு!!!!!!
எழுப்புபவன் நீயா???
எழுப்பப்படுபவன் நீயா?????
கிழக்கும் மேற்கும்
அறிந்தேனே உன்னாலே..
வாழ்க்கை வழக்கம்
வரைந்தனரே உன்வரவாலே..

நீயோ..
அண்டமுடியா அனல்கோளம்
உதயமது மறந்தாலோ
கண்டமதும் கருநிறமாய்
பூண்டிடுமே இருள்கோளம்....

விடியலைத் தேடும்
விட்டில்கள் பல உண்டு..
புலருமொரு காலையென்றே
புலம்புமொரு கூட்டமுண்டு..

காலை கதிரொளியே..
நீ..
என்வாசல் வந்தது..
எந்த விடியல் தேடித்தான்?????????

No comments: