Saturday, December 13, 2008

சின்ன சின்ன..

சின்ன சின்ன புள்ளிகள்தான்
பரந்தே விரியும் பெருங்கோலமாய்..
சின்ன சின்ன மழைத்துளிதான்
பெருகி யோடுமே வெள்ளமதுவாய்..

சின்ன சின்ன துகள்கள்தான்
உணவாகுமே சிற்றெரும் பதற்கே....
சின்ன சின்ன முத்துக்கள்தான்
கோர்த்தே மாலையாகும் கழுத்துக்கே..

சின்ன சின்ன தவறுகள்தான்
உணர வைக்குமே உண்மைநெறி..
சின்ன சின்ன தடைகள்தான்
படைக்க தூண்டுமே சாதனைதான்..

சின்ன சின்ன புன்னகைதான்
நட்பெனும் பூ மலரத்தான்..
நட்புவலைகள் விரியட்டுமே..
சின்ன சின்ன கவலையுந்தான்..
கற்பூரமாய் காற்றில் கரைய..

1 comment:

Thangamani said...

என் அன்புள்ள அகிலா!
அருமை!"சின்னச் சின்ன", பெரிய செய்திகள் தருகின்றன!

சின்ன சின்ன கவலையுந்தான்..
கற்பூரமாய் காற்றில் கரைய..

மனச் சிறகு லேசாகி
நினைவில் உவகை பூத்திடும்!

அன்புடன்,
தங்கமணி.