Friday, September 24, 2021

முகனூல் வாழ்க்கை

 காஃபி குடிக்கும்போது வாட்ஸப்பில் shasri

கவிதைப் போட்டியில் prize என்று.

I was in cloud nine.


எல்லாருக்கும் திறமை இருக்கு.

அது தூங்கிக்கிட்டு இருக்கு..

தட்டி எழுப்ப தானாக வெளி வருகிறது.

#மத்யமர் தளம் இருக்க

மனசில் இருக்கறதை கொட்ட..

Prize கிடைச்சதனால் ..இந்த

Praise இல்லை..

Prize முக்கியமில்லை..

Participation முக்கியம்னு 

 பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தது.

பின்னாளில் கை கொடுக்கிறது எனக்கு.

Thanks so much #madhyamar and my lovely friends there who keep me encouraging.


இன்னிக்கு நாலு வரி நான் எழுதுகிறேன்.என்றால்..அதுக்கு காரணம்..

ஏதாவது எழுது..உன் பாணியில் எழுது என்று என்னை ஊக்குவித்து விட்டு.என்னை விட்டுச் சென்ற என் மாமியார் thangamani

தங்கமணி எங்கே நீ..

உன் கிட்ட இதை காட்டணுமே..


இந்தக் கவிதைக்கு judges special mention certificate .


#மத்யமர்_கவிதைப்_போட்டி

#பதிவு 1

#இதுதான்_முகநூல்_வாழ்க்கை


நூலொன்று படியென்றால்

நுனிப்புல்லும் மேய்வேனே..

முகநூல் வந்திங்கே

மூழ்கடிக்குதே..நாளுமிங்கே


"ஏதாவது எழுதென்று"

என்னைத் தூண்டிடுமே

எதிர்ப்பார்க்க வைத்திடுமே

எத்தனை விரும்பிகளென்று..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை


விருப்பக் குறிகள்..பதிவின்

விதியை நிர்ணயிக்க..

வீழாமல் காக்குமே..

விழுதாய் நட்புக் குழாம்


#இதுவே_முகநூல் வாழ்க்கை.


முகமூடிகள் நடமாட்டம்

மனதிலோடும் பட்டிமன்றம்.

முடிவறியாப் போராட்டம்.

பட்டாலே புரிந்திடுமே..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை.


நீலச்சாயம் வெளுத்தாலும்

நிதர்சனங்கள் புரிந்தாலும்

நித்தமுனது தரிசனம்

 நகர்த்துமே... நாட்களை..


முடக்கத் தோன்றினாலோ

முடங்கும் பயமிருக்க

அடங்கிப் போனேனோ?

விடத்தில் வீழ்ந்தேனோ?


முகநூலில்லா வாழ்வு

முகாரி இசைக்குமென்று

மாயை வலையிலிலிங்கு

மீளா மாந்தரானோம்..


நடமாட்டம் கூடினாலும்

நகருவதும் நாடுவதும்

நாளும் பொழுதுமிங்கே

நிலையில்லா வாழ்க்கை..


#இதுவே_முகநூல்_வாழ்க்கை


 ..

No comments: