Saturday, September 18, 2021

Thangamani ..எங்கே நீ?

 பரிசு..


பரிசு..பெரிசா அப்படியெல்லாம் எதுவும் வாங்கியதில்லை.

ஆனால்..என் பசங்க வாங்கி வரும்போது நானே பெற்றது போல சந்தோஷத்தில் திளைத்திருக்கேன்.


முகநூலில் எழுத ஆரம்பித்து எனக்கு கிடைத்த முதல் பரிசு 🎁 


கடிதப் போட்டி சீஸன். ..3 

ஷேக் முஹமது and team நடத்திய ஒரு முகனூல் போட்டியில்.


முதல் நாற்பதில் தேர்ந்தெடுக்கப்பட்டு ,

புத்தகங்கள் நான்கு பரிசாக வந்த நாள்..

எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தேன்.


இன்று..

போன மாதம் ஆகஸ்ட் மங்கையர் மலர் இதழில் என் கவிதை வேறொருவர் பெயரில் வெளிவந்த போது கொஞ்சம் மனசு கஷ்ட்டப்பட்டது. 

தவறு நடந்து விட்டது என்று அவர்கள் சொன்னபோது நம்ம luck அவ்வளவுதான் என்று ஒரு மனசு அழுதாலும்....

ஆஹா..நாம் எழுதின ஒரு நாலு வரி publish ஆகி இருக்கேனு பயங்கர குஷி.


இன்று இன்னுமோர் இன்ப அதிர்ச்சி.


பரிசுத் தொகை 250 ரூபாயும் என்னைத் தேடி வந்தது.


கொஞ்சம் flash back


2008 ம் வருஷம் .தேஹ்ராதூனில்  ஒரு மத்யான வேளையில்  என் மாமியாரின் ஃபோன்.

ஊர் வம்பு அடிச்ச பிறகு , 

அகிலா..' தலைமுறை இடைவெளி' இந்தத் தலைப்பில் நாலஞ்சு வரி கவிதை எழுது பார்க்கலாம் 'என்றாள்.


அம்மா..are you kidding ..உங்களை மாதிரி நான் என்ன கவிதாயினியா ? என்றேன்.


நகை, ,புடவை கேட்டதில்லை என்னிடம் அவள் என்றும்.

அவள் ஆவலாய்க் கேட்டது ஒரு கவிதை.

மனதில் தோன்றியதை எழுதிப் படித்தேன்.


ஆஹா..ஓஹோ என்று புகழ்ந்து என் போக்கில் ..மரபுக்குள் வராத என் கவிதைகளை (கிறுக்கலை) ரசித்தவள் அவளே..


நானும் அவளும் கவிதை ,கட்டுரை பற்றி பேசியதுதான் அதிகம்..a bond envied by many.


Thangamani Srinivasan.இன்னிக்கு நாலு வரி எழுதுகிறேன் என்றால் ..அது உன்னால் தான். 

ஃபோட்டோவில் இருந்தபடியும் இன்னிக்கு என்ன எழுதப் போறேனு அன்பாய் மிரட்டுபவள் அவள்.


Thangamani ..எங்கே நீ?


No comments: