Monday, December 6, 2021

நாளை..உனதே..

 நாளை..உனதே..


வீசி எறியப்பட்ட புத்தகப்பை..

விடுமுறை நாளையென சொல்லிடுமே


திறந்து கிடக்கும் பேனாவோ..

டீவிக்கு ஓடும் அவசரம் சொல்லிடுமே


_off செய்யாத மடிக்கணினி..

online இருப்பதை சொல்லிடுமே


போட்டுப் பார்த்து பரத்திய துணிகள்..

போக வேண்டிய பார்ட்டி சொல்லுமே.


அடுக்கி அழகாக்கிய அலமாரி.

அவள் தோழி வருவதை சொல்லிடுமே..


Green tea யில் காய்ந்த கப்

காலை வரை படிப்பை சொல்லிடுமே


கழுத்தைக் கட்டி கொஞ்சையிலே..

காரியம் எதுவென்று புரிந்திடுமே..


உருட்டல் மிரட்டல் வேகாது பருப்பு..

உனக்கு வேலையே இல்லையானு சலிப்பு


கிளிக்கு அங்கே இறக்கை முளைக்கும்..

விடுதலை பெற்று வெளியே பறக்கும்..


சத்தம் அடங்கும்..

சுத்தம் பெருகும்..

கத்தலில்லா..வாழ்வு..

கசக்கும் எட்டிக்காயாய்..

 காத்திருப்பு அதிகமாகும்..

ஏக்கம் நிறையுமங்கு..

வழி பார்த்து ..

விழி ஏங்கும்..

சீறியது போய்..

சிறுபிள்ளையாய்..

சின்ன மனம் ஏங்கும்..

செல்லமே..

எப்போ நீ வருவாயென்று..


வருவாய் நீயும்..

வீடே மாறி ப் போகும்

அம்மா..

ஏன் இப்படி அழுக்கா இருக்கு..

என்னை கேட்க ஆளாவாய் நீயும்..


No comments: