Monday, July 4, 2016

புத்தன்

உன்னில் உறங்கும் எனை..
ஊரெல்லாம் ஏன் தேடல்??
'என் வழியை'..
உன் வழியே..
ஊடகமாய் பார்த்திடவே..
உன் மனமும் வைப்பாயே..

உள்ளக்கதவு திற..
உண்மை உலகும்..
உள்ளத்து மலர்ச்சியும்..
உயிர்களிடம் அன்பும்
உன்னையே நீ அறியும்..
ஒர் நாளும் வந்திடுமே..

ஆழ்ந்த உறக்கத்தில் நானல்ல..
நீயேதான்..
அமைதியாய்க் காத்திருக்கேன்..
நீ விழித்தெழும்..
அந்த நாளுக்காக..

No comments: