Tuesday, November 29, 2022

உலக_உணவு_தினம்

 #உலக_உணவு_தினம்


 


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..அது கிடைத்த பின்னாலே பேச்சு வரும்..

சரிதானே..என்னது அதுனு யோசிச்சீங்களா?

Correct ...உணவு ..அதுதாங்க..


காலையில் எழுந்ததிலேர்ந்து ஒரே கேள்வி..

இன்னிக்கு என்ன சமையல்..

இன்னிக்கு என்ன சாப்பாடு..

ஃபோனை எடுத்தாலோ..பக்கத்து வீட்டோடு பேசினாலும்..முதல்ல கேக்கற கேள்வி..' சாப்புட்டாச்சா' ..


இன்னிக்கு உலக உணவு தினம்..

இதைப் பற்றி எல்லாரும் கூகுள் ஆண்டவர் துணையோட வரலாறு கண்டிப்பா தெரிஞ்சிண்டு இருப்பீங்க..


உணவு என்பது ஒரு basic right .

அது இல்லாமல் எத்தனை பேர் கஷ்ட்டப்படறாங்க..

எல்லாம் தெரியும் நமக்கு..


இந்த வருஷ theme.. 

“#Our_Actions_Are_Our_Future.

இதைப் படிச்சதும் எனக்கு தோன்றியது..

சின்ன வயதிலிருந்து நாம் கற்ற ஒரு விஷயம்..' உணவை எக்காரணத்தை கொண்டும் #waste பண்ணக்கூடாது..


எல்லாமே use and throw இப்போது. ஆனால் , காசின் அருமை தெரிந்தவர்கள்,ஒரு விவசாயியின் உழைப்பை அறிந்தவர் யாரும் ஒரு குந்துமணி கூட வீணாக்க மாட்டார்கள்.


எல்லா வீடுகளிளுமே..ரச வண்டியோ..குழம்பு கூட்டு என்று எது மீந்தாலும்..எல்லாவற்றையும் ஒன்றாகக் கொட்டி ஒரு சூப்பர் சைட் டிஷ் தோசை இட்லிக்கு ரெடி பண்ணிடுவார்கள் பாட்டி அம்மா எல்லாரும்.


இப்போது மீண்டும் அந்த awareness நிறைய வீடுகளிலும் இடங்களிலும் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.


இந்த வருஷ நவராத்திரியில் நான் கற்றுக் கொண்ட சிலவற்றை ஷேர் பண்றேன்.


நவராத்திரி வந்தது..

எங்கே பார்த்தாலும் சுண்டல் பாக்கெட், 

கலந்த சாத வகைகள், .

என் அபார்ட்மென்ட் தோழிகள் எல்லாரும் மண்டை உடைச்சுண்டோம்..

ஒவ்வொரு பிரசாதமும் பிரமாதம்.

எப்படி வேஸ்ட் பண்றது?

வந்தது ஐடியா..


#சுண்டல்_தோசை புது ரெசிபி கண்டுபிடிச்சோம்.

Collection sundal  and mixed rice எல்லாத்த்கையும் மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து..கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து சூப்பர் சுண்டல் தோசை பண்ணி சாப்ப்ட்டோம்.


#வெத்தலை..

அதை கூட விடலை..

வெத்தலையை ஓவனில் வெச்சு எடுத்து

சோம்பு, கல்கண்டு, ஏலக்காய் ,கிராம்பு, எல்லாம் சேர்த்து..மிக்ஸியில் அரைத்து பொடி ரெடி பண்ணி.. 

குல்கந்த் இருந்தால் சேர்க்கலாம்

சூப்பர் #paan ready.


அடுத்து ..நிறைய #எலுமிச்சம்பழத்தோல் சேர ஆரம்பிச்சது..

ஊறுகாய் ஐடியா ரெடி..


ஒரு டப்பால உப்பும் மஞ்சப் பொடியும் சேர்த்து போட்டு ..அதில் இந்த எலுமிச்சம் தோலை போட்டுக் கொண்டே வரணும்.

நல்லா ஊறும்.

பின்..வெந்நீர் ல இந்த எலுமிச்சை போட்டு கொதிக்க வைத்து..ஆறினதும் நிறைய பச்சை மிளகா , இஞ்சி சேர்த்து அரைத்து..

தாளித்து கொட்டி நன்றாக வதக்கி எடுத்து வைக்க..

வகை வகையாய் சாப்பிட்ட வாய்க்கு..தயிர் சாதத்துடன் தேவாமிர்தமாகும்..


இப்படி சின்ன சின்ன டிப்புகள்..நம்மை டாப்புக்கு உயர்த்தும்.

Charity மட்டுமல்ல..conservation also begins at home.


இந்த உலக உணவு தினத்தில்..

உற்பத்தி எவ்வளவு முக்கியமோ..

உட்கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ..

அதை விட முக்கியம்..

உணவில் ஊதாரித்தனமாக இல்லாமல் இருப்பது..


Taste bhi..health  bhi and no waste bhi..

No comments: