முருகனை நினை மனமே..
ஆமாம்..இன்னிக்கு வருஷத்தின் கடைசி சஷ்டி விரதம்..
என்ன கோலம் போடலாம்னு யோசனை..
ஆஹா..
madhubani..
மாக்கோலத்தில் வருமா?..
சரி. சரி..அவன் பெயர் சொல்லி போட ஆரம்பிக்க..
அவனே கொடுத்தான் ஐடியா..
மயிலிறகை..வேல் போல் வரை என்று..
முருகா..முடிஞ்ச அளவு முயற்சிக்கிறேன்னு...
வண்ணம் நிரப்ப..நிரப்ப..
வாசலில் வந்தாடியது அழகு மயில்..
தோகைகள் வேல் போல விரிய..
வேலுண்டு..வினையில்லை..
மயிலுண்டு ..
மனக்கவலையில்லை..
முருகா..முடியப் போகும் வருடம்..
முழுமையாய் வாழ்ந்தேனா தெரியவில்லை..
மலரப் போகும் வருடம்..
மாந்தர்க்கெல்லாம் மகிழ்ச்சி தரட்டும் என்ற பிரார்த்தனை யுடன்..
இந்த நாள் இனிய நாள்
ரங்கோலியிலும் எனை நினைக்க..
அங்கே வந்து மகிழ்வேன் என்றான்..
அவன் தத்துவம்
No comments:
Post a Comment