Tuesday, December 6, 2016

போய் வா..மகளே.போய் வா

போய் வா..மகளே ..போய் வா

எப்போதும் போல வீட்டு எஜமானி ..எடுத்து வைத்தாள்..பழைய சோற்றை..வேலைக்கு உதவும் பெண்ணுக்கு..
ஐயே....சோறு வேண்டாம்மா .ரவைக்கே grinder ல மாவு போட்டாச்சு..mixie ல ஒரு சட்னி அரைச்சா போதும்...
laptop ல வேலை செய்யும் புள்ளைக்கு கொடுத்துட்டு..
table fan காத்தில..TV கொஞ்ச நேரம் பார்த்துட்டு...அடுத்த வேலைக்கு ஓடணும்..
அம்மா..உணவகம்..அம்மா..குடிநீர்..எங்களுக்கு என்ன குறை..
தலை நிமிர்ந்த பல குடும்பங்கள்... அம்மாவின்..அதே..
ஆற்றலுடன் முன்னேறும் மக்கள்..
இழந்தோம்....ஒரு சக்தியை....

வெண்ணிற ஆடையில்..
எங்கிருந்தோ வந்த
சந்திரோதயம் நீ..
யார் நீ என்றால்..
தனிபிறவி என்றாய் நீ
அடிமைப் பெண்ணல்ல நீ
சவாலே சமாளி நீ..
மணிமகுடம் சூடிய..
குமரிப் பெண் நீ.
எங்கள் தங்கம் நீ..
ஆதி பராசக்தி நீ
அன்னை வேளாங்கண்ணி நீ.
அன்னமிட்ட கை நீ..
சூரிய காந்தி நீ..
வைர நெஞ்சம் நீ
ஒளிவிளக்கு நீ..
அரச கட்டளையாய்
ஒரு தாய் மக்களென
புதிய பூமியாய்
நம் (தமிழ்) நாட்டை ..
காவல் காத்து..
பொம்மலாட்ட உலகில்..
திக்கு தெரியாத காட்டில்..
சக்தி லீலை புரிந்து..
குடியிருந்தாய் ..
மக்கள் மனமெனும்..
கோவிலிலே..
அன்பைத் தேடி ..
பட்டிக்காடும்..
பட்டணமும் விட்டு..
நதியை தேடும் கடலில்..
கரைந்தே போவாயோ..
கந்தன் கருணயுண்டு..
காவல்காரனில்லை இப்போ..
ரகசிய போலீசாய்...
காப்பாய்..
கண்டிப்பாய்..எம்மை..
Rest in peace Amma..

No comments: