Thursday, December 15, 2016

அழியாத கோலங்கள்

அழியவே எழுதப்பட்ட
அழகான கோலங்கள்..
அழிக்கப் படும்போது..
அழுமே நெஞ்சமுமே..



கலைந்து சிதறிய கோலம்..
கொட்டிக் கவிழ்த்த எண்ணெய்..
குட்டி எலி வேலையோ ..இல்லை
குட்டிச் சாத்தான்களின்
கும்மாளம் ..குதூகலம்..

துடைப்பத்துடன் வந்த
துப்புரவு பணியாளர்..
சுத்தம் சுத்தம்னு
சத்தம் போடுவியே..
அசுத்தம் இங்கே..
ஆசிட் கொண்டா..
அழுக்கு போகலையோ..
ஆளைத் தூக்கிடுவான்..
அலம்பல்..புலம்பலுடன்..

தூக்கில் ஏற்றி என்னை
தூ இவ்வளவுதானா..
தூசியாய் பார்த்த வேளை..
வாதம் என்னுடையது
வாதத்தில் தவித்த வேளை..

வாழ்க்கை பாடம்..
வளரும் வயதிலே..
வகையாய் கற்பித்தால்..
வாழ்வும் செழிக்குமே..
வளமை பெருகுமே..


நாகரீக நண்டுசிண்டுகள்..
நுனி நாக்கில் ஆங்கிலம்
நாலும் தெரிந்த பேச்சு.
'நான்' என்ற எண்ணம்..

வாண்டுகளின் வால்த்தனம்..
கண்டும் காணாமல்...
காணாமல் விட்ட தொடரின்
கதை கேட்டும் அம்மா ..

குறை சொல்ல நானில்லை..
கற்றுத் தரலாமொ கொஞ்சம்..
சுற்றியிருப்பதெல்லாம்..
சொத்து உனதல்ல வென்று..

நாளைய மன்னர்கள்..
நல்லது கற்கட்டும்..
நல்லாட்சி அமைக்கட்டும்
நலமோடு வாழட்டும்..

No comments: