Monday, November 14, 2016

நான் கண்ட பாரதம்

வீட்டு வேலை எல்லாம் முடித்து
Water bottle biscuit சகிதம்..
வர ரொம்ப நாழியாகும்..
வழி மேல் விழி வைக்க வேண்டாம்..
வங்கியில் இன்று பணமெடுக்கணும்..
வேகமாய் கிளம்பினேன்..
வங்கி வாசல் வரை
கூட்டம் இருந்தது..
குழப்பம் இல்லை..
கத்தல் இல்லை..
சண்டை இல்லை..
தெரியாதவர் ..தெரிந்தவருக்கும்..
தெளிவாய் சொல்லித் தந்தனரே
தரும் ஃபாரம் எப்படி நிரப்ப என்று..
மடமட என்று நகர்ந்தது வரிசை..
மணிக் கணக்காகுமென்ற
மனக்கணக்கு தப்பியது..
அவரவர் உரிமையும்..
அவரவர் கடமையும்..
அவரவர் புரிந்து நடந்தமையால்..
அமைதியாய்...அரங்கேறுகிறது..
அசகாயப்் புரட்சி..
(நான் கண்ட பாரதமிது..என் அனுபவம் இந்த இரண்டு நாளில்)

No comments: