Thursday, November 10, 2016

கவலையில்லா..மனிதர்கள்

காய்காறிக் காரம்மா..
ரொம்ப கறாரு தானம்மா.
காசெல்லாம்  வேண்டாம்..
கணக்கு வெச்சிக்கறேன்..
காசோலையா கொடுத்திடு..
கரீட்டா..ஆமாம். ..என்றாள்..
மருந்து கடைக்காரரோ
இருக்கு இன்னும் ரெண்டு நாளு..
இருக்கற ஐநூறு ஆயிரத்தில்
இங்க மருந்தும்..சோப்பும் வாங்கென்றார்..
தையல் காரரோ..
துணி இங்கே இருக்கட்டும்..
பணத்தோட வாங்க என்றார்...
ஊரைச் சுத்திட்டு..
நிலவரம் தெரிஞ்சிண்டு..
வீட்டுக்குள் நுழைய..
வந்தாள் ..
வேலைசெய்யும் லஷ்மியுமே...
ஐநூறும் ஆயிரமும்..
யாரிடமும் வாங்காதே..
செல்லாது இப்போ ...
சொன்ன நேரம்..
சிரித்தபடி சொன்னாள்..
வாங்குற சம்பளம் ..
அட்வான்ஸ் ல கழிஞ்சாச்சு..
எட்டணா கையில் இல்லை..
எங்கிட்டு போவேன்..
ஆயிரமும் ஐநூறும்..
வைத்திருப்பவருக்கே..
வயிறு கலங்கும்..

No comments: