Friday, November 25, 2016

வெற்றி என் பக்கம்

பூவும் காயும் வித்து
பொழுதும் உழைக்கும் அம்மா..

பட்டம் பெறுவேன்..நானும்..
பட்டத்து ராணி..யாவாய் நீயும்..

வீணாகும் விளக்கு வெளிச்சம்..
விதி எமது மாற்றும்..

விட்டில் பூச்சி நானல்ல..
வீழ்ந்தே மடிய ..பிறப்பல்ல..
வருமிடர் களைந்தே நானும்..
தருவாய் தாங்குவேன் உனையே

கதையாகும்.. கடந்த காலமுமே
கரமுனது பிடித்தே நானும்..
கண்டு களிப்பேனே..அன்று
கையளவு உலகம் இதையுமே..

No comments: