Saturday, November 26, 2016

நெஞ்சும் நிறைந்திடுமே

கொஞ்சும்  குழவியின் மழலை மொழியில்
நெஞ்சும் இங்கு நிறைந்திடுதே..
கூட்டில் வாழும் குருவிகள் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே..
கூடி வாழும் குடும்பம் கண்டு..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
கும்பிடும் தெய்வம் கண்ணில் தெரிய..
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
இருள் நீக்கும் விடியல் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
வானில் மின்னும் விண்மீன் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
மழையும் நீரும் நதியும் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
காதல் சொல்லும் தென்றல் வருடலில்
நெஞ்சும் இன்று நிறைந்திடுதே
பனியும் துளியும் படரும் கொடியும்
நெஞ்சும் இன்று நிறைத்திடுதே
மலையும் முகிலும் மோதக் கண்டு
நெஞ்சும் இன்று நிறைந்தததுவே
பஞ்ச பூதங்கள் புவியைக் காக்க
நெஞ்சும் இன்று நிறைந்ததே..
பாவக் கறைகள் கற்பூரமாய் கரைய..
புது உலகம் ஒன்று பிறந்திடவே..
உண்மை,நேர்மை பொறுமை கொண்டே..
உள்ளங்கள் வெல்ல உழைப்போமே..
நெஞ்சும் நிமிர்த்தி சூளுரை செய்வோம்..
வஞ்சம் லஞ்சம் இங்கில்லை யென்றே..
மனிதமும் மானுடமும் ஓங்கும் தருணம்
நெஞ்சும் நிறையுமே
உண்மையில்..அன்று

No comments: