Friday, November 25, 2016

மழை வருமோ..

இராத்திரியில் வராதே.
லைட்டும் போய்டுமே.
ராவெல்லாம் படிக்கணுமே..
வேண்டினான்..
பொதுத் தேர்வு மாணவன்..
காலையிலே வராதே..
காஞ்சிபுரம் பட்டுடுத்தி..
கல்யாணம் போகனுமே..
கவலையுடன்..கன்னியுமே..
மத்தியானம் வராதே..
மொறுமொறுனு..
மாவு வடாம் காயனுமேனு..
மாமியும் வேண்டினாளே..
சாயுங்காலம் வராதே..
சோடியோட..
சினிமா போணும்..
சின்னப் பையன்..
சேவித்து நின்றான்..
வெடித்து விரிந்த மண்ணோ..
என் வாசனை வந்து..
எத்தனை நாளாச்சு..
மழையே..
மறுபடியும் எப்போ வருவே..
மனிதக் குரல் கேட்குமுனக்கு..
மண் குரல் விழவில்லையா..
மழையே..வருவாயே..
மழையே வருவாயே..

No comments: