Monday, November 14, 2016

நான் கண்ட பாரதம் ...நேற்று

மூணு நூறு ரூபாய் கையில்.
மூக்கைப் பிடிக்க சாப்பிட ஆசை..
உணவகம் நுழைந்தேன்..
உவகையாய் உண்டேன் ..
சர்வர் வந்தார் பில் கொண்டு..
கர்வமாய் நீட்டினேன் கார்டையுமே..
சர்வர் டவுனு...சொறிந்தார் தலை..
சரியாப் போச்சு.. சங்கடத்தில் நான்..
இருப்பதைக் கொடுத்தால்..
இன்னிக்கு வீடு சேரமுடியாதே..
இக்கட்டில் சிக்கிய நேரம்..
இளையராஜா பாட்டு.
எல்லாரும் மாவாட்ட கத்துகிடணும்
என் மனதில் ஓட..
சகஜமாய் சொன்னார்..
சரி சரி ..நளைக்குத் தாங்க..
மனுசனுக்கு மனுசன்
உதவலனா எப்படி என்றே..

கடன் உறவை முறிக்கும்
கடையில் மாட்டிய போர்டு..
கண்சிமிட்டியது..
என்னைப் பார்த்து..

No comments: