Tuesday, November 8, 2016

நல்ல மனம் வாழ்க

பேஷா இருந்தது எல்லாம்..
புல்லரித்தது..
பிராமணர் சொன்னபோது..
நானே..நானா..
என் சமையல் தானா..
அமைஞ்சே போச்சா..
அட..ஆகாசத்தில் நானா..
அதீத சந்தோஷத்தில்..
ஆவலாய் சுவைக்க..
அலற வைத்தது..
அவரையில் உப்பு...
வடையோ..
வடிக்க வடிக்க எண்ணை..
கல்லாய் போனது..
எள்ளு்ருண்டையும்..
அதிரசமோ..
அள்ளும்படி..
திரட்டுப்பாலோ..
ரப்பர் பாலோ....
வாய் திறக்காமல்..
வாழ்த்தி விட்டு போன..
வேதமோதும் வித்தகருக்கு..
வந்தனம் பல சொல்லி..
கோணல்களை நேராக்கி..
குடும்பத்துக்கு பரிமாறி..
பூரித்த வேளை
கும்பிடத் தோன்றியது..
குற்றங்  காணா ..இவர்
நெஞ்சங்கண்டு

No comments: