Friday, November 4, 2016

அம்மா..கதை

how was d trip?..
அசதியாய் நுழைந்த என்னை..
அதி சுறுசுறுப்பாகிய ..கேள்வி..
ஆர்வமாய் ஆரம்பிக்குமுன்..
அறைக்குள் போய்..
அமெரிக்க நேரத்தில்..
அவள் வேலை தொடர்ந்தாள்..
சீமந்த புத்திரியுமே..
அடுத்து வந்த சின்னவள்..
ஹாய் மா..என்றாள்..
அடுத்த நாள் ப்ராஜக்ட்..
அதீத வேலை..
அவசரத்தில்..அவளும்..
அறை நோக்கிச் சென்றாள்..
அசை போட்டேன்..
அந்த நாளை..
யாராவது ஊர் போய் வந்தால்..
'ஆ 'என வாய்பிளந்து..
ஆதி முதல் அந்தம் வரை..
அவர் சொல்லும் கதை கேட்டு..
ஆஹா..என்ன அனுபவம்..
அமையுமோ நமக்குமென்று..
நம்பிக்கையில் வாழ்ந்த நாட்கள்..

வேலை முடித்ததும்...
விசேஷம் என்ன என்றாள்..
மூடில்லை இப்பொதென்று..
முறுக்கிக் கொள்ளாமல்
விவரித்தேன்...
வரிசையாய்..
நாளை ஒன்று வரும்..
அவள் பிள்ளை
ஆசையாய் கேட்குமே
அம்மா ..கதை ..
அப்போது..உதவுமே..
இப்பொ நான் சொல்லுவது..

No comments: