Friday, November 4, 2016

நல்லாட்சி

குறட்டையோடு..
குட்டித் தூக்கம்..
குளறும் பேச்சு..
குதப்பும் பீடா..

கரை வேட்டி கும்பல்..
கட்சி கூட்டம்..
வேட்டிக் கரை சொல்லும்..
வேஷம் இப்போ எதுவென்று..

மந்திரிகள் சூழ
மப்பிலேயே ராஜாங்கம்..

குளங்கள்..
குப்பை கொட்ட..
சாய்க்கப்படும் மரங்கள்..
ஸ்டீல் பாலம் போட..

பெருந்தலைவர் வீட்டை
பெருக்கித் துடைக்கும்
போலீஸ்காரர்கள்..
தலையாட்டும்..
தீவிர தொண்டர்படை

கோப்புக்கள் ..சூழ
கோப்பையுடன்..
இவர்...
கையெழுத்து...பலர்
தலையெழுத்தாகும்..

 பிரச்சினைகள்..
படமெடுத்தாலும்..
பாதி தூக்கத்தில்..
புரியுமா இவருக்கு.

நீருக்கு.. நீயா நானா..
நீதிக்கு தலைவணங்கா..
நெஞ்சில் ஈரமிலா..
நம் நாட்டு மன்னரிவர்கள்..

நல்லாட்சி ...
நமக்கு..கானல் நீரா..???

No comments: