Saturday, November 26, 2016

நான் கண்ட பாரதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் style..
ATM வந்தது முதல்..
எட்டிப் பார்த்தாயா..
paytm வந்ததும்..
bank ஐ மறந்தாயா
fund transfer  வந்ததும்..
friend ஒருத்தர் உண்டா..

card வாங்கியதும்..
courtesy call உண்டா..
cheque எழுதினாயா..
draft எடுத்தாயா..
online  வந்தவுடன்
offline  ஆனவனே..கேள்.

மானேஜரா..கிளார்க்கா..
மரியாதையா..வரிசையில் நில்லு..

(ஐயோ சாமி..கட்ட பொம்மா..கனவில் நீருமா..?)
கொஞ்சம் பின்னோக்கி பார்க்க..

அம்மா சொல்லித் தர.
காசோலையும்.
.கணக்கிருப்பும்..
கடுப்பேற்றினாலும்
கால் கடுக்க நின்று..
கற்ற நாட்கள்..
கை கொடுத்ததே இப்போதும்

வருஷம் பல கடந்து..
வங்கி சென்றபோது..
வரதே இல்லயே இப்போ..
வருத்தமாய் கேட்ட குரல்கள்..
வந்து போகுமே..நினைவில்
வரிசையில் இப்போ..
வசைபாடி நிற்கும்போது..
சுகங்கள் கண்டதால்..
சுருங்கும் முகம் இன்று..

வருங்காலம் ....வரட்டும்
வஞ்சமிலா..லஞ்சமிலா
வழியை உணர்த்தட்டும்..
வலிகள் எல்லாம்..
வலிமை சேர்க்கட்டும்..
வாழ்வு மலரட்டும்..

No comments: