Friday, November 25, 2016

யாதும் ஊரே யாவரும் கேளிர்

உடன்பிறப்பு இல்லையென
உள்ளூர அழுதேனே.
இருந்தும்...இல்லா
இக்கட்டு ஓரிடம்..
இல்லையென்பதால்..
இழந்தது ஒன்றில்லையென..
தெளிந்தேன்..அன்று..
வாழப் பழகினேன்..
வழங்கத் தெரிந்தேன்..
வானுமோர் எல்லையிலா..
வற்றாத அன்பையுமே..
பூங்குன்றன் பாடல் போல்.
பூந்தோட்டமாய் என் வாழ்வு..
கவிபாடும்..
காயத்திரி பூவும்
கண்டிப்பாய் அதிலுண்டு.
சுருங்கினாலும்..மலர்வோம்..
மணம் பரப்புவோம்..வா..
வெல்வோம்..வா

No comments: