Saturday, November 26, 2016

before i die


வாசல் திறந்தேன்..
வாடிய.. நீ அங்கே..
வந்தாய் எப்படி...??
வருடினேன் உன்னையே..
மடியும் நாள் வந்தாச்சு..
மூச்சது முடியுமுன்..
உள்ளுக்குள் ஓர் ஆசை..
உவகையில் கேட்டேன்..
உன் உள்ளத்திலுள்ளது..
உதிருமுன் சொல்லென்றேன்..
ஒன்னும் பெரிசா இல்லை..
ஒரு போட்டோ புடி என்றாய்..
பள்ளிகொண்ட பெருமாள் போல்..
படுத்தபடி நீ இருக்க.
பருவப் பெண்ணைப் போல்..
புன்முறுவல் நீ பூக்க..
பிடித்தேன்..படம்
அடைத்தேன்..உன்னை
என் நெஞ்சுக் கூட்டில்..
போய் வா…இலையே
போய் வா..
மீண்டும் நீ வரும்போது..
மண்ணில் இருப்பேனோ
மறக்காமல் சொல்வேன்..
மகளும் அவளிடமே..

வருவாய் நீ என..

No comments: