Tuesday, November 22, 2016

காக்குருவி...கதைகேளு

ஒத்தையா.. நீ
ஒடன்பொறப்பு??
ஒட்டு உறவெல்லாம்..
ஒனக்கெங்கே புரியும்..
மறைவிலும்..முகத்திலும்..
மோவாகட்டை இடித்து பேசி
மனசை புண்ணாக்கிய..
மஹானுபாவர்களுக்கு..
ஒட்டி உறவாடுனதெல்லாம்..
வெட்டியே..வெளியே போக..
ஒத்தை காக்குருவிக்கு
ஊரெல்லாம் சொந்தமாக..தன்
குஞ்சு குட்டிக்கெல்லாம்..
கத்து கொடுத்துச்சாம்..
கூடப் பொறந்தாதான்..
சொந்த பந்தமில்ல..
காட்டு ..உன் அன்பை
கலப்படம் இல்லாம..நீ.

கூவிக் கரஞ்சா போது..
கூட்டம் ஒன்னும் வந்திடுமே..
காலம் போனாலும்..
காக்குருவி எங்கூடு..
கலகலப்பா இருந்திடுமே..
பலகூட்டு பறவைங்க..
பறந்து வந்திடுமே..
விருந்தொன்னு..உண்பதற்கே

No comments: