Friday, November 25, 2016

குட்டிக் குருவி...வருக வருக

காக்குருவி கூட்டினிலே..
குட்டிக் குருவி ஜனனமின்று...
காத்திருப்பு பல நாளாய்..
கலி தீர்க்க வருவாய் என..
கவி யொன்று புனைந்திங்கே
காலமும் ஆச்சு கண்ணே..
கண் துஞ்சா காத்திருப்பு..
கனவோடு பல ராவும்..
குருவியும் நீ வந்தாய்..
கண்ணீர் இனியில்லை..
காக்கும் கரம் உன்வரவால்
குலமென் தழைக்க வந்த..
குட்டிக் குருவியே..
குதூகல குடும்ப வலைக்குள்
கூடி  உனை வரவேற்கிறோம்..

குட்டிக் கிளை உனக்கும்...நம்
குடும்பமெனும் பெருமரத்தில்..
கூவி  நீ அழையாமலே..
கூடி உனைக் காப்போமே..

பெரியம்மா...நானானேன்
பிடிபடவில்லை..என்
பெருமையின்று..
பேணி உனைக் காப்போமே..
பேரோடும்.புகழும்..
பண்போடும்..அன்போடும்..
பல்லாண்டு வாழ்ந்திடவே..
பாமாலை..சூடுவேனே

No comments: