Tuesday, November 29, 2016

கொண்டை சேவல் கூவும் நேரம்

தானியம் தேடப் போனேன்..
தனமும் அங்கே கண்டேன்..
கொக்கரக்கோ மறந்தேன்..
கொட்டி இருக்கு பணமென்றேன்..
குறட்டை விட்டவனும்..
குப்பற அடிச்சு ஓடி வந்தான்..
செல்லாத நோட்டை கண்டான்..
சீறி விழுந்தான் என் மேலே
சுத்த அறிவு கெட்டவனே..
சொப்பனத்தில் நானிருந்தேன்..
கத்தையாய் நூறு நடுவில்..
நிம்மதியை கலைத்தேனோ..
நழுவினேன்..அங்கிருந்தே..
நாளை..
கூவலாமா..வேண்டாமா..
குழப்பத்துடன்..நானிங்கே

No comments: