Thursday, October 6, 2016

நவராத்திரி

நவராத்திரி..
்(அவரவர்)..அம்மா அலமாரி முதல் (முன் ஜாக்கிரதை தான்)
அன்றையத் தேதி
டிசைன் புடவைகள் வரை..
பாதுகாப்பு பெட்டகதிலிருந்து..
புது விடுதலை காணும்..
பளிச்சிடும் நகைகள்..
பாப் வெட்டிய சுட்டிகள்..
பட்டு கட்டிய பட்டாம்பூச்சிகள்..
அபார்ட்மெண்ட் வாழ்க்கை..
அலுப்பே இல்லா கொண்டாட்டங்கள்.
குஜராத்தியும்..கன்னடரும்..
தமிழரும்..தெலுங்கரும்..
மலையாளமும் மராட்டியரும்..
ஓரிடம் கூடி..
அம்பாள் நாமம்..
ஆயிரமதை
அவரவர் மொழி வடிவில்
அழகாய்ச் சொல்லி..
ஆரத்தி எடுத்து..
அவனியில் அன்பைத் தா என்று..
பாடி முடித்து..
பாக்கும்  வெத்தலையும்..
பாங்காய் பெற்றுக் கொண்டு..
நாளை என் வீட்டில்..
ஞாபகமாய் வரணும்னு சொல்லி..
நங்கைகள் நயமாய்
விடை பெறுவோம்..
எங்கிருந்தோ வந்தோம்.
இணைந்தோம்...
இவள் அருள் வேண்டி..
ஒன்பது நாள் ..
ஓடியேப் போகும்
ஒன்றிப் போகுமே
உள்ளங்கள்..

நவராத்திரி....நாயகிகள்
நம்மில்லம் வரட்டும்.
நல்லருள் தரட்டும்..
நன்மைகள் பெருகட்டு.

No comments: