Monday, October 17, 2016

பூம்பூம் மாட்டுக்காரன்

பூம்பூம் மாட்டுக்காரன்..
பார்த்ததுமே..
பயந்து நகருவேன்..
அவன் விதவித முண்டாசும்..
அவன் சொல்லுவதெற்கெல்லாம்..
புரிந்ததோ..இல்லையோ..
பூரிப்பாய் தலை யாட்டும்
பூம்பூம் மாடும்...

இன்றும் கண்டேன்...
சின்னத் தெருவொன்றில்..
நகர்ந்து ஓடிடலாம்..
நினைத்த நேரம்..
நிற்க வைத்தது..
அவன் சின்ன நாதஸ்வரம்..
அதிலிருந்து எழுந்த நாதம்..

ஆனந்த பைரவியில்..
palukke bangaramayena.வை
பிசகாமல் வாசித்து..
அவனோடு அழகாய்
தலையாட்டிய மாடு..

கற்றதா..
காற்றில் கேட்டதா....

அம்மணி...
எதனாச்சும் இருந்தா கொடு...
அவன் குரல்...
எண்ணத்தை..கலைக்க..


கோதண்டராமா..
எப்போ உன் கடைக்கண் அருள் கிட்டும்.?

No comments: