Thursday, October 6, 2016

தாயுமானவன்

தந்தை..
தட்டிக் கேட்பவன்
தோளில் சாய்த்து..
தட்டி வளர்ப்பவன்..
உள்ளங்கையில்
பிள்ளை பாதம்..
முள் தைக்காமல்..
முன்னேறச் செய்பவன்..
கொட்டித் தீர்க்க மாட்டான்..(தேள் போல)
கொட்டித் துன்புறுத்த அறியான்..
சட்டியில் இல்லாவிடினும்..
ஆப்பையில் வரவைப்பான்..
மன(ண்) கோட்டையும்..
கட்டிடமாகும் இவன்
விடாத உழைப்பில்..
இவன்..
கண்டிப்பின் பின்னே
கருணை உண்டு..
கண்ணுருட்டல் பின்னே
கண்ணீரும் உண்டு..
இவன்..
மெளனத்தின் பின்னே..
மன உறுதியுண்டு..
தகப்பன் ...சாமிதான்..
கண்டேன் இங்கே..
என் தந்தையிலும்..
என் பிள்ளைகளின்
தந்தையிடமும்..

No comments: