Sunday, August 21, 2016

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம்

ஆண்டுதோறும் வரும்..
ஆவணி அவிட்டம்..
அசைபோடும் மனது..
அந்த நாள் நினைவுகளில்..

திருநெல்வேலி...
திருவனந்தபுரம்..
திருச்சி..
தாரமங்கலம்..
கோவில்பட்டி..
வேலூர்..
எல்லா ஊரும் என்
சின்னஞ்சிறு..
டெல்லி வீட்டில்..
நண்பர்கள் வடிவில்..

கை நிறைய காசு..
பையில் கொஞ்சம்..
காய் பழம்..
வாழை இலை..
வானை எட்டும் விலையில்..
காய்கறி வியாபாரி..
கோடீஸ்வர ராய்த் தெரிவார்..
(இலையை அலம்பி எடுத்து recycle பண்ணலாமானு idea கொடுக்கும் மாண்புமிகு மச்சினர் dhileepan)

பாண்ட் சர்ட் போட்டவரெல்லாம்..
பட்டு வேட்டி சர சரக்க..
பட்டைப் பட்டையாய்..
வீபூதியோடு..
ஒரு சிலர் சிரத்தையாய் ..
ஒரு சிலர்..
செஞ்ச பாவத்துக்கு ஒரு ஓம்..
செய்யும் பாவத்துக்கு ஒரு ஓம்..
செய்யப்போறதுக்கு ஒரு ஓம் ..சொல்லி
புதுப் பூணல் போட்டு..
புதுப் பொலிவோடு..
ஆரத்தி எடுத்து..
அட்சதை போட்டுண்டு
மாமி ..சமையல் ரெடியானு..(நான்தான் மாமி எல்லாருக்கும்)
மடமனு இலை போட்டு..
வட்டமாய் உட்கார்ந்து..
வடையும் பாயசமும்..
கூட்டும் குழம்பும்..
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போகும்..
கவலை எட்டிப்பார்க்கும்..
இன்னொரு round கேட்டு..
இல்லனு சொல்லாம..
நிறைவா இருக்கனுமேனு

(என் சமையலையும்..சிலாகித்து... என்னை
ஊக்குவித்த என் கணவரின் அன்பு நட்பு வட்டம்)

வயிறு நிரம்பியதும்..
செவிக்குணவு ஆரம்பம்..
ராஜாவும் ரஹ்மானும்..
இந்த பாட்டு..
அந்த ராகம்..
analysis..
அனல் பறக்க..
பின்..
ஒரு குட்டித் தூக்கம்..
filter coffee..
விடை பெறுதல்..
( தொட்டி்யில ்ரொம்பிய பாத்திரம்..தாயம்மா வந்ததும் பளபளக்கும்..
இத்தன பேரை ஏம்மா கூப்பிடறே..என்பாள்..)..
கால ஓட்டம்...அவரவர் திசையில்..வேலை ..குடும்பம்..
இப்போ..மிச்சம் இருப்பது இந்த இனிய நினைவுகள் ...
திரும்பி வராத
தித்திப்பான தருணங்கள்...

No comments: