Sunday, December 13, 2020

சக்குளத்து பகவதி

 பழம் மட்டும் சாப்பிட்டு 

ஞானப் பழமாகும் Sumathi Manivannan எங்கே..

சான்ஸ் கிடைச்சா போதும்..

சாக்கு போக்கு சொல்லி

சக்கரைப் பொங்கல் தின்னும்

அகிலா எங்கே..


இன்னிக்கு எதுக்கு சக்கரைப் பொங்கல்னு கேட்பவர்களுக்கு இதோ..


ஆசாமி வந்தாலும்..சாமி வந்தாலும்..முதல்ல நம்ம வேலை..அவங்களுக்கு படைச்சு பொடைச்சு எடுக்கறதுதான்.


சக்குளத்துக்காவு அம்மன்..என் வீட்டை தேடி படம் உருவில் என்னைக் காக்க வந்தாள். பயம் கஷ்டம்,சந்தோஷம் எதுவெனிலும் அம்மா கிட்ட ஷேர் பண்ணிப்பது போல இவளிடம்..

சண்டையும் சமாதானமும் கூட உண்டு..


கார்த்திகை அன்று பொங்கலிட்டால்..பூரித்து போவாள் தான்..

அன்னிக்கு செய்யமுடியலை..அதான் வெள்ளிக்கிழமை இன்னிக்கு பகவதிக்கு பிரசாதம் செஞ்சாச்சு..


சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே

சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே..


நல்ல செயல் செய்ய நீ வைக்கணும்

நல்ல வார்த்தை சொல்ல நீ வைக்கணும்

நல்லவர்களின் நட்பு நீ கொடுக்கணும்

அல்லல் நீக்கி எம் குலத்தை காக்கணும்..


என்று சொல்லும்போதே ஒரு பாஸிடிவ் எனர்ஜி நமக்குள் பாய்ந்தோடும்..


" உடலை விட்டெந்தன் உயிர் பிரியும் போது 

உடனே வருவாய் ஒளி மின்னல் போல் ' என்று உருகும்போது..உனக்கு நானிருக்கேன் என்பாள்..


"காமமும் க்ரோதமும் லோபமும் மோஹமும் ..என்னில் வராமல் நீ காத்திடுவாய் .

சாமகானப்ரியே சண்டிகே 

என்னை நீ..

ஹோமாக்னி குண்டத்தில் ஹவிஸாக்குவாய் ". சொல்லும்போதே சூழ்ந்த இருள் எல்லாம் விலகும் மாயம்.


சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே

சக்குளம் காவில் தேவி நமோஸ்துதே..


அன்புடன்.

No comments: