Thursday, December 10, 2020

Happy karthigai

 Happy karthigai


நேத்திக்கி சாயந்தரம் அப்பாவுக்கு ஏதொ பொறி தட்ட..


"ஏம்மா.கார்த்திகை நாளைக்கு தானே..இன்னும் நீ பொரியே பண்ணலையேனு கேட்க..


"அப்பா..என் பொறுமையை சோதிக்கும் பொரியைப் பத்தி ஒரு வரி கூட பேசாதப்பானு" அவரை பொரி கலங்க வைக்க..

பொரினு கேட்டத்துக்கு இவ எதுக்கு இப்படி எறிஞ்சு விழறானு என்னை பார்க்க..

"பின்ன என்னப்பா..பாதி பொரி கூட்டணிலேர்ந்து பிரிஞ்சு தனிக் கட்சியா பேந்தப் பேந்த முழிக்கும். அதனால பொரிக்கு நான் பிரியா விடை கொடுத்துட்டேன்.."

ஏதோ பாவம் ..பொரிஞ்சு தள்றானு..


 அடுத்த பொறியில் என்னை மாட்ட வைக்க திட்டம் போட்டார்..


"அப்போ..அப்பம் பண்ணிடேன்.. "

"அப்பமா..அதுக்கு பழுத்த வாழைப்பழம் இல்லனு" நான் அப்பீல் தர..


"சரி..அப்போ..அடை.."

"அடை....அதான் டாக்டர் உங்களுக்கு தடை போட்டிருக்காரே.."

"அதனால்..இந்த தடவை பழமும் பாயசமும் மட்டும் நெய்வேத்தியம்.."


இன்னிக்கு மத்யானம்..

வெல்ல அப்பம் எண்ணெயில் துள்ளி விளையாட.

தோசைக் கல்லில் அஞ்சு ஓட்டை அடை ..

தயாராகிக் கொண்டிருக்க..

தூங்கி எழுந்த வந்த அப்பா..

" எனக்குத் தெரியும்..நீ எப்படி பண்ணாம இருப்ப? ..கண்ணால் பேசிட்டு ..


"கொடு..இந்த விளக்குக்கு எல்லாம் திரி போட்டு எண்ணெய் விட்டு,சந்தனம் குங்குமம் இட்டு கொடுத்துடறேன்..நீ சீக்கிரம் நல்ல புடவை கட்டிண்டு வந்து விளக்கேத்து'..


அந்த அன்பு.. அந்த வாத்ஸல்யம்..


கற்றதும் பெற்றதும்  இந்நாளில் இதுவே..


அன்பு சூழ் உலகு

No comments: