Thursday, April 23, 2015

மேகத்தின் தாகம்




மேகத்தின் தாகம்

எத்தனை அழகு இந்த பூமி
எட்டி மேலிருந்து பார்க்கையிலே
ஏக்க மொன்று தோன்றுதே
எப்பொ கீழே போவொமென்றே

வானை எட்டும் தென்னையும்
வளைந்து ஓடும் ஆறுகளும்
வண்ணஞ் சிந்தும் வனங்களும்
வாசந் தரும் பூக்களும்

துள்ளி யோடும் மான்களும்
தாவித் திரியும் வண்டுகளும்
துவண்டே போகா கடலலையும்
தரையில் விரிந்த பசும்புல்லும்

தள்ளி நின்று பார்க்கையிலே
தவிப்பு மாகுதே மனமிங்கே
எட்டா உயரத்தில் நானிங்கே
தொட்டுப் பார்க்க ஏங்குவனே

அதனால் தானோ அலைகின்றேன்
அடைமழையாய்க் கண்ணீர் சிந்துகிறேன்
ஆண்டவன் அவனை வேண்டுவேனே
அடுத்த பிறவி உண்டு எனில்
மண்ணில் மைந்தனாய்ப் பிறப்பதற்கே
அதுவரை கொஞ்சம் பொறுத்திடுங்க
அன்னை இயற்கையை காத்திடுங்க..
அன்பாய் ஒரு வேண்டுகோளும்
அவனி மாந்தர்க்கு விடுப்பேனே..


No comments: